கேகேஆர் அணி வெளியேறியதற்கான முழு காரணமும் அவர்கள் மட்டும் தான் - ஆரோன் ஃபிஞ்ச்!

Updated: Sun, May 18 2025 11:51 IST
Image Source: Google

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்த இருந்தன. 

பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி மைதானத்தில் நடைபெற இருந்த இப்போட்டியானது தொடர் மழை காரணமாக டாஸ் வீசப்படாமலேயே கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளியும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆர்சிபி அணி பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ள நிலையில், நடப்பு சாம்பியனான கேகேஆர் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பையும் அதிகாரப்பூர்வமாக இழந்துள்ளது. 

ஏனெனில் நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடஸ் அணி விளையாடிய 13 போட்டிகளில் 5 வெற்றி, 6 தோல்விகள் மற்றும் இரண்டு முடிவில்லை என மொத்தமாக 12 புள்ளிகளை மட்டுமே பெற்றதன் காரணமாக பிளே ஆஃப் சுற்றிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறிவுள்ளது. இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெளியேறியதற்கு அந்த அணியே காரணம் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆரோன் ஃபிஞ்ச் கூறிவுள்ளார்.

இதுகுறித்து பேசிய ஆரோன் ஃபிஞ்ச், “கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இந்த சீசன் நன்றாகத் தொடங்கவில்லை. நீண்ட காலமாக மேட்ச் வின்னர் வீரராக இருக்கும் ஆண்ட்ரே ரஸ்ஸல், போட்டியின் பெரும்பகுதியில் கீழ் வரிசையில் மட்டுமே பேட்டிங் செய்து கொண்டிருந்தார். ஆட்டங்களில் தன்னால் இயன்ற அளவு செல்வாக்கு செலுத்த அவருக்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் தங்களைத் தாங்களே குறை சொல்ல வேண்டும்” என்று கூறிவுள்ளார். 

Also Read: LIVE Cricket Score

ஃபிஞ்ச் கூறியது போல் நடப்பு ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணி பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் சொதப்பியுள்ளது. அணியின் பேட்டிங்கில் கேப்டன் ரஹானே, அங்கிரிஷ் ரகுவன்ஷியைத் தவிர்த்த மற்ற வீரர்கள் பெரிதளவில் சோபிக்கவில்லை. அதிலும் குறிப்பாக வெங்கடேஷ் ஐயர், சுனில் நரைன் மற்றும் ரிங்கு சிங் உள்ளிட்டோர் பொரும்பாலான போட்டிகளில் சோபிக்க தவறியதே அணியின் தோல்விக்கி மிகப்பெரும் காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை