லண்டனில் கவுண்டி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இதில் இந்திய வீரர் சத்தேஸ்வர் புஜாரா, பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் ஆகியோர் சசெக்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்கள். 

Advertisement

இதில் துர்ஹாம்அணிக்கு எதிரான நேற்றை ஆட்டத்தில் இந்திய வீரர் புஜாரா அபாரமாக ஆடி சதம் அடித்து 128 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருக்கிறார். மற்றொரு முனையில்  பாகிஸ்தான் வீரர் ரிஸ்வான் 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருக்கிறார். இருவரும் கடைசிநேர பார்ட்னர்ஷிப் அமைத்து களத்தில் மகிழ்ச்சியாக சிரித்துப் பேசி உரையாடியதை கவுன்ட்சி சாம்பியன்ஷிப் நிர்வாகமே புகழ்ந்துள்ளது.

Advertisement

கிரிக்கெட் உலகில் பரம எதிரிகளாக் பார்க்கப்படும் இந்தியா, பாகிஸ்தான் அணிகளைச் சேர்ந்த இரு வீரர்கள் ஒற்றுமையாக ஒரே அணியில் விளையாடுவதும், பார்ட்னர்ஷிப் அமைத்து பேட் செய்வதும், மகிழ்ச்சியாக சிரித்துப் பேசுவதும் பார்க்க வித்தியாசமாக இருந்தது. இதைத்தானே எதிர்பார்த்தோம் என்று ரசிகர்கள் புகழ்ந்து வருகிறார்கள்.

இதுவரை புஜாரா சசெக்ஸ் அணிக்காக 3 சதங்களை விளாசியுள்ளார், இதில் ஒன்று இரட்டை சதமாகும். டெர்பிஷையர் அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸி்ல் 6 ரன்னில் ஆட்டமிழந்த புஜாரா, 2-வது இன்னிங்ஸில் இரட்டை சதம் அடித்து 201 ரன்கள் சேர்த்தார். 

2ஆவது போட்டியில் வோர்செஸ்டயர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் புஜாரா முதல் இன்னிங்ஸில் 109 ரன்களும், 2ஆவது இன்னிங்ஸில் 12 ரன்களும் சேர்த்தார். 

தற்போது 3ஆவது ஆட்டத்தில் துர்ஹாம் அணிக்காக ஆடிவரும் புஜாரா 128 ரன்களுடன் களத்தில் உள்ளார். புஜாராவும், ரிஸ்வானும் அமைத்த பார்ட்னர்ஷிப்புக்கு கவுன்டி சாம்பியன்ஷிப் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் “ என்னமாதிரியான கனவு பார்ட்னர்ஷிப்” எனப் புகழ்ந்துள்ளது. 

Advertisement

முகமது ரிஸ்வான் இதுவரை சிறப்பான இன்னிங்ஸை ஆடவில்லை. டெர்பிஷையர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் 22 ரன்கள் சேர்த்தார், 2-வது இன்னிங்ஸில் பேட் செய்யவில்லை. 

வோர்செஸ்டர்ஷையர் அணிக்கு எதிரா ஆட்டத்தில் இரு இன்னிங்ஸ்களிலும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தார். 6-வதுவிக்கெட்டுக்கு புஜாரா, ரிஸ்வான் கூட்டணி அமைத்து ஆடி வருகிறார்கள். இதுவரை சசெக்ஸ் அணி வெற்றி பெறவில்லை, இருவரும் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தால் சசெக்ஸ் அணிக்கு முதல் வெற்றி கிடைக்கும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News