இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வெஸ்ட் விளையாடி வருகிறது. இந்தத் தொடரில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி கடைசி நேரத்தில் விக்கெட்டுகளை வேகமாக எழுந்து, வெல்ல வேண்டிய போட்டியில் இறுதியில் நான்கு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

Advertisement

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்செய்வதாக அறிவித்து களமிறங்கியது.  அதன்படி இந்திய அணிக்கு வழக்கம் போல தொடக்க வீரராக களமிறங்கிய ஷுப்மன் கில் ஒன்பது பந்துகளில் 7 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் பரிதாபமாக ஒரு ரன்னில் ஆட்டம் இழந்தார்.

Advertisement

தடுமாறிக் கொண்டிருந்த இசான் கிஷான் 23 பந்தில் 27 ரன்கள் எடுத்து வெளியேறினார். இரண்டாவது வாய்ப்பைப் பெற்ற சஞ்சு சாம்சன் தேவையில்லாத ஷார்ட் விளையாடி 7 பந்துகளில் ஏழு ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இப்படி விக்கட்டுகள் ஒருபுறம் விழுந்து கொண்டு இருந்தாலும் இளம் வீரர் திலக் வர்மா ஆட்டத்தை காட்டினார்.

இந்த போட்டியிலும்  பொறுப்பாக விளையாடிய அவர் 41 பந்துகளில் ஐந்து பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 51 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதன்மூலம் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்களைச் சேர்த்தது. 

இந்நிலையில் இப்போட்டியில் திலக் வர்மா அரை சதம் அடித்ததன் மூலம் இந்திய அணிக்காக குறைந்த வயதில் அரை சதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற சிறப்பைப் பெற்றார்.  தற்பொழுது இவருக்கு 20 வயதாகிறது. இவருக்கு முன்னால் இதே வயதில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான டி20 உலக கோப்பையை வென்ற தொடரில், தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக ரோஹித் சர்மா அரை சதம் அடித்தது சாதனையாக இருக்கிறது. மூன்றாவது இடத்தில் ரிஷப் பந்த் இருக்கிறார்.

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக குறைந்த வயதில் அரை சதம் அடித்த வீரர்கள்

  • ரோகித் சர்மா 20 வயது 143 நாட்கள்
  • திலக் வர்மா 20 வயது 271 நாட்கள்
  • ரிஷப் பந்த் 21 வயது 38 நாட்கள்
Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News