எனது அடுத்த குறிக்கோள் உலகக் கோப்பையை கைப்பற்றுவது தான் - திலக் வர்மா!

Updated: Sun, Aug 06 2023 15:07 IST
எனது அடுத்த குறிக்கோள் உலகக் கோப்பையை கைப்பற்றுவது தான் - திலக் வர்மா! (Image Source: Google)

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டி20 போட்டி நேற்று முன் தினம் நடந்தது. இதில், முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 149 ரன்கள் எடுத்தது. இதையடுத்து எளிய இலக்கை துரத்திய இந்திய அணி 145 ரன்கள் மட்டுமே எடுத்து 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. 

இதன் மூலமாக 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதில், அதிகபட்சமாக அறிமுக வீரராக களமிறங்கிய திலக் வர்மா 22 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உள்பட 39 ரன்கள் குவித்தார். முன்னதாக நடந்து முடிந்த ஐபிஎல் 16ஆவது சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியில் திலக் வர்மா இடம் பெற்று விளையாடினார். இதில் 11 போட்டிகளில் விளையாடி 343 ரன்கள் குவித்தார். இதற்கு முன்னதாக கடந்த சீசனில் 14 போட்டிகளில் விளையாடி 397 ரன்கள் குவித்தார்.

இந்நிலையில் இதுகுறித்து பேசிய அவர், “ இவ்வளவு சீக்கிரம் இந்திய அணியில் இடம் பெறுவேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. ஆனால், தற்போது இந்திய அணியில் இடம் பெற வேண்டும் என்ற கனவு நிறைவேறிவிட்டது. எனது அடுத்த குறிக்கோள் உலகக் கோப்பையை கைப்பற்றுவது தான்.

சிறுவயது முதலே, இந்தியா உலகக் கோப்பையை வெல்வதே எனது இலக்காக இருந்தது. என் மனதில், உலகக் கோப்பையை எப்படி வெல்வது என்று நான் எப்போதும் யோசிப்பேன். நான் இந்த யோசனையில் சென்று பேட் செய்து உலகக் கோப்பையை வெல்வேன் என்பதை தினமும் நினைத்துப் பார்ப்பேன்..

தற்போது இந்திய அணியில் இடம் பெற்றுவிட்டேன். அடுத்து உலகக் கோப்பையை வெல்ல வேண்டியது தான். இந்தியா உலகக் கோப்பையை விரைவில் வெல்லும். இது ஒரு பெரிய உணர்வு, என்னால் அதை வெளிப்படுத்த முடியாது, எல்லோரும் என்னிடம் கேட்கிறார்கள், ஆனால் நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உணர்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை