இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டி20 போட்டி நேற்று முன் தினம் நடந்தது. இதில், முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 149 ரன்கள் எடுத்தது. இதையடுத்து எளிய இலக்கை துரத்திய இந்திய அணி 145 ரன்கள் மட்டுமே எடுத்து 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. 

Advertisement

இதன் மூலமாக 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதில், அதிகபட்சமாக அறிமுக வீரராக களமிறங்கிய திலக் வர்மா 22 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உள்பட 39 ரன்கள் குவித்தார். முன்னதாக நடந்து முடிந்த ஐபிஎல் 16ஆவது சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியில் திலக் வர்மா இடம் பெற்று விளையாடினார். இதில் 11 போட்டிகளில் விளையாடி 343 ரன்கள் குவித்தார். இதற்கு முன்னதாக கடந்த சீசனில் 14 போட்டிகளில் விளையாடி 397 ரன்கள் குவித்தார்.

Advertisement

இந்நிலையில் இதுகுறித்து பேசிய அவர், “ இவ்வளவு சீக்கிரம் இந்திய அணியில் இடம் பெறுவேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. ஆனால், தற்போது இந்திய அணியில் இடம் பெற வேண்டும் என்ற கனவு நிறைவேறிவிட்டது. எனது அடுத்த குறிக்கோள் உலகக் கோப்பையை கைப்பற்றுவது தான்.

சிறுவயது முதலே, இந்தியா உலகக் கோப்பையை வெல்வதே எனது இலக்காக இருந்தது. என் மனதில், உலகக் கோப்பையை எப்படி வெல்வது என்று நான் எப்போதும் யோசிப்பேன். நான் இந்த யோசனையில் சென்று பேட் செய்து உலகக் கோப்பையை வெல்வேன் என்பதை தினமும் நினைத்துப் பார்ப்பேன்..

தற்போது இந்திய அணியில் இடம் பெற்றுவிட்டேன். அடுத்து உலகக் கோப்பையை வெல்ல வேண்டியது தான். இந்தியா உலகக் கோப்பையை விரைவில் வெல்லும். இது ஒரு பெரிய உணர்வு, என்னால் அதை வெளிப்படுத்த முடியாது, எல்லோரும் என்னிடம் கேட்கிறார்கள், ஆனால் நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உணர்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News