16ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் 35ஆவது லீக் ஆட்டத்தில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய குஜராத் டைட்டன்ஸ் அணியானது 55 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியில் குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்து 207 ரன்களை குவித்தது. இந்த ஆட்டத்தில் குஜராத் அணி சார்பாக துவக்க வீரர் சுப்மன் கில் 56 ரன்களையும், பின்வரிசையில் டேவிட் மில்லர் 46 ரன்களையும், அபினவ் மனோகர் 42 ரன்களையும் குவித்து அசத்தினர்.

Advertisement

அவர்களது இந்த அதிரடி காரணமாக குஜராத் அணி 207 ரன்களை குவித்தது. பின்னர் 208 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது 20 ஓவர்களின் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் மட்டுமே குவிக்க 55 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது.

Advertisement

இந்நிலையில் இந்த போட்டியின் போது ஒரு கட்டத்தில் குஜராத் அணி 180 ரன்களையாவது எட்டுமா என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் பின் வரிசையில் களமிறங்கிய அபிநவ் மனோகர் 21 பந்துகளை சந்தித்து மூன்று பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் என 42 ரன்கள் குவித்ததன் காரணமாக அவருடன் இணைந்த மில்லர் மற்றும் திவாதியா ஆகியோர் அதிரடியாக விளையாட அந்த அணி 200 ரன்களை கடந்தது. இப்படி அபிநவ் மனோகர் விளையாடிய அதிரடியான ஆட்டத்திற்கு அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது. 

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தனது அதிரடி குறித்து பேசிய அபினவ் மனோகர், “நான் குஜராத் அணியில் இருப்பதை மிகவும் அதிர்ஷ்டமாக உணர்கிறேன். ஏனெனில் வலைப்பயிற்சியின் போது எவ்வளவு நேரம் பேட்டிங் செய்தாலும் அவர்கள் என்னை பேட்டிங் செய்ய அனுமதிக்கிறார்கள். அதே போன்று நான் நிறைய பயிற்சி செய்வதினால் தான் போட்டியின் போதும் என்னால் அதிரடியாக விளையாட முடிகிறது.

என்னுடைய சிறு வயதிலிருந்து நான் பந்தை நன்றாக பார்த்து விளையாடிய வருவதால் என்னால் அதிரடியாக விளையாட முடிகிறது. இதுபோன்ற பெரிய லெவல் கிரிக்கெட்டில் விளையாடுவது என்னுடைய கனவு. அந்த வகையில் இந்த போட்டியிலும் என்னுடைய சிறப்பான ஆட்டம் வெளிப்பட்டதில் மகிழ்ச்சி” என தெரிவித்துள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News