இந்தியாவில் கோலாலமாக நடைபெற்று வரும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று அஹ்மதாபாத் நகரில் நடைபெற்ற போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை 33 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா தோற்கடித்தது. இத்தனைக்கும் அந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்து ஆஸ்திரேலியாவை 49.3 ஓவரில் 286 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கியது.

Advertisement

ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக மார்னஸ் லபுஷாக்னே 71, கேமரூன் கிரீன் 47 ரன்கள் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக கிறிஸ் ஓக்ஸ் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். ஆனால் 287 ரன்களை துரத்திய இங்கிலாந்துக்கு மீண்டும் ஜானி பேர்ஸ்டோவ், ஜோ ரூட் 13, கேப்டன் ஜோஸ் பட்லர் 1, லியாம் லிவிங்ஸ்டன் 2 என முக்கிய பேட்ஸ்மேன்கள் குறைந்த ரன்களில் அவுட்டாகிய ஏமாற்றத்தை கொடுத்தனர்.

Advertisement

அதனால் பென் ஸ்டோக்ஸ் 64, மொயின் அலி 42, கிறிஸ் ஓக்ஸ் 32 ரன்கள் எடுத்தும் 48.1 ஓவரில் இங்கிலாந்தை 253 ரன்களுக்கு சுருட்டி வென்ற ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக ஆடம் ஸாம்பா 3 விக்கெட்டுகள் எடுத்தார். இதனால் ஆஸ்திரேலியா 5ஆவது வெற்றியை பதிவு செய்து அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ள நிலையில் 6ஆவது தோல்வியை பதிவு செய்த இங்கிலாந்து லீக் சுற்றுடன் அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளது.

சொல்லப்போனால் அதிரடியாக விளையாடக்கூடிய அந்த அணி அரையிறுதி முதலாவதாக இருக்கும் என்று ஏராளமான முன்னாள் வீரர்கள் ஆரம்பத்திலேயே கணித்தனர். ஆனால் இந்தியாவில் அந்த எதிர்பார்ப்புக்கு நிகராக செயல்பட முடியாமல் சந்தித்த இந்த தோல்வியே தம்முடைய கேப்டன்ஷிப் கேரியரின் மோசமான புள்ளி என்று ஜோஸ் பட்லர் வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த போட்டி முடிந்தபின்னர் பேசிய இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர், “இது நிச்சயமாக எங்களுக்கு வேதனை அளிக்கிறது. நாங்கள் 2019 ஆண்டு போல உச்சத்தை தொட விரும்புகிறோம். ஆனால் அது மிகவும் கடினமானது. அதற்கு எவ்வளவு உழைப்பை கொடுக்க வேண்டி இருக்கும் என்று எங்களுக்கு தெரியும். நாங்கள் எங்கள் மக்களை ஏமாற்றி இருக்கிறோம் என்று உணருகிறோம்.

இந்த ரன்கள் துரத்துவதற்கு சரியாக இருக்கும் என்று நினைத்தேன். என்னுடைய ஃபார்ம் மிகவும் கவலைக்குரிய ஒன்றாக இருந்து வருகிறது. நான் இங்கு வரும்பொழுது நல்ல நிலைமையில் இருந்தேன். ஆனால் என்னுடைய மோசமான ஃபார்ம் எனது அணிக்கு பெரிய பிரச்சனையை கொடுக்கிறது. அடுத்து மீண்டும் நெதர்லாந்துக்கு எதிரான போட்டிக்கு திரும்பி வரவேண்டும். பார்ம்க்கு வருவதற்கான வழிகளை பார்க்க வேண்டும்"என்று கூறியுள்ளார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News