அண்டர் 19 உலகக்கோப்பை: இங்கிலாந்தை 189 ரன்களில் சுருட்டியது இந்தியா!

Updated: Sat, Feb 05 2022 22:20 IST
U-19 World Cup final: India need 190 runs to win after James Rew show (Image Source: Google)

அண்டர் 19 உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்து விளையாடியது. 

அதன்படி களமிறங்கிய அந்த அணி இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர். 

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிதானமாகவும், பொறுப்பாகவும் விளையாடிய ஜேம்ஸ் ரெவ் அரைசதம் கடந்து அணிக்கு நம்பிக்கையளித்தார். 

ஆனால் மறுமுனையில் களமிறங்கிய வீரர்கள் வந்த வேகத்திலேயே நடையைக் கட்டினர். பின் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜேம்ஸ் ரெவ் 95 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். 

இதனால் இங்கிலாந்து அணி 44.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 189 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவீச்சில் ராஜ் பாவா 5 விக்கெட்டுகளையும், ரவி குமார் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதையடுத்து 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடவுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை