டி20 உலகக்கோப்பையில் இந்தியா மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையேயான முக்கியமான லீக் போட்டி நேற்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி ஒரு மிகப்பெரிய வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பை உயிர்ப்புடன் வைக்க முடியும் என்ற கட்டாயத்தில் களமிறங்கியது. 

Advertisement

நேற்றைய போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட்கோலி முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார். அதன்படி இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சு காரணமாக 17.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஸ்காட்லாந்து அணி 85 ரன்கள் மட்டுமே குவித்தது. இந்திய அணி சார்பாக ஜடேஜா மற்றும் முகமது ஷமி ஆகியோர் சிறப்பாக பந்துவீசி தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

Advertisement

அதன்பின்னர் 86 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணிக்கு 7.1 ஓவரில் அடித்தால் ரன் ரேட்டில் ஆப்கானிஸ்தான் அணியை முந்த முடியும் என்ற நிலை இருந்தது. அதனால் துவக்கத்திலிருந்தே இந்திய அணி சிறப்பான அதிரடியை வெளிப்படுத்தியது. 

முதல் 6 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 82 ரன்கள் குவித்தது. ரோகித் சர்மா 30 ரன்களும், ராகுல் 50 ரன்கள் குவித்து அசத்தினார்கள். பின்னர் மீதமுள்ள 7 பந்துகளில் 4 ரன்கள் அடித்தால் போதும் என்ற நிலைமை இருந்தது. இறுதியில் ஆறாவது ஓவரின் 3-வது பந்தில் சிக்சர் அடித்து சூர்யகுமார் யாதவ் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். 

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, “இந்த போட்டியில் நாங்கள் ஆதிக்கம் செலுத்தி விளையாடி உள்ளோம். ஆனால் இந்த போட்டி குறித்து அதிகம் பேச விரும்பவில்லை 7ஆம் தேதி என்ன நடக்கிறது ? என்பதை காண ஆவலாக உள்ளோம். இதுபோன்ற போட்டியில் டாஸ் வெற்றி பெறுவது என்பது முக்கியம்.

அந்த வகையில் இந்த போட்டியில் டாஸ் வென்று அவர்களை 110-120 ரன்களுக்கு சுருட்ட நினைத்தோம். ஆனால் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டது காரணமாக அதையும் விட குறைவாக ரன்களில் சுருட்ட முடிந்தது. பேட்டிங்கில் கேஎல் ராகுல் மற்றும் ரோஹித் ஆகியோர் சிறப்பாக துவக்கம் கொடுத்தனர். நாங்கள் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னர் 8 முதல் 10 ஓவர்களிலேயே இந்த வெற்றி இலக்கை அடைய அடைய நினைத்தோம். ஆனால் ராகுல் மற்றும் ரோகித் ஆகியோரது துவக்கம் எங்களை விரைவிலேயே அணியின் வெற்றிக்கு அழைத்துச் சென்றது.

Advertisement

Also Read: T20 World Cup 2021

துவக்கத்திலேயே அதிரடியாக விளையாடி ஒரு விக்கெட்டை இழந்ததால் மேலும் 20 பந்துகளை கூடுதலாக சந்திக்க நேரிடும். ஆனால் எங்களது ஓப்பனர்கள் இந்த போட்டியில் பயிற்சி போட்டிகளில் எவ்வாறு விளையாடினார்களோ அதேபோன்று அதிரடியாக விளையாட நாங்கள் ரன் ரேட்டை மனதில் வைத்தே 6.3 ஓவர்களிலேயே முன்கூட்டியே போட்டியை முடித்து வெற்றி பெற்றுள்ளோம். பந்துவீச்சில் ஜடேஜா மற்றும் ஷமி பேட்டிங்கில் ரோஹித் மற்றும் ராகுல் சிறப்பாக விளையாடினர்” என தெரிவித்துள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News