பீட்டர்சன்னை கலாய்த்த தோனி - நினைவுகளை பகிரும் உத்தப்பா!

Updated: Sun, May 30 2021 13:46 IST
Image Source: Google

கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன், 29 போட்டிகள் நடைபெற்ற நிலையில் ஒத்திவைக்கப்பட்டது. 

இந்நிலையில், எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகள் அனைத்தும் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம் 18 அல்லது 19ஆம் தேதி தொடங்கும் என பிசிசிஐ இன்று அறிவித்துள்ளார். 

இதற்கிடையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், நடப்பாண்டு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் ராபின் உத்தப்பா, இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன்னிற்கும் இந்திய அணி முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கும் இடையே நடைபெற்ற சில வெடிக்கையான தகவல்களை தெரிவித்துள்ளார். 

இது குறித்து உத்தப்பா "ஒரு போட்டியின் போது வர்ணனையாளராக இருந்த பீட்டர்சன், தோனியை கிண்டல் செய்யும் விதமாக பேசினார். அதற்கு தோனி அவரிடம் 'நான் உன்னுடைய விக்கெட்டை வீழ்த்திருக்கிறேன். அதுவும் நான் எடுத்த முதல் விக்கெட்டும் நீ தான். அதனால் ஏதும் பேசாமல் அமைதியாக இருக்க வேண்டும்' என பதிலுக்கு கலாய்த்தார். 

மேலும் தோனியின் கைகள் ஸ்டம்பிங்கில் மட்டுமே வேகமாக இயங்கும் என்றால் அது பொய். அவர் எதிராளியை கிண்டலடிப்பதில் அதைவிட வேகமாக செயல்படுவார்" என்று தெரிவித்துள்ளார். தோனி குறித்து உத்தப்பா கூறிய கருத்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை