ராஜ்கோட்டில் உள்ள நிரஞ்சன் ஷா மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஆனால் இந்தப் போட்டியில், இந்திய சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி தனது நான்கு ஓவர்களில் 24 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளையும் அவர் தனது பெயரில் பதிவுசெய்துள்ளார். 

Advertisement

மோசமான உலக சாதனையை

Advertisement

இப்போட்டியில் வருன் சக்ரவர்த்தி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்த நிலையிலும் இந்திய அணி தோல்வியைச் சந்திக்க நேர்ந்தது. இதனால் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் இரண்டு முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையிலும் அணி தோல்வியடைந்ததன் அடிப்படையில் முதல் பந்து வீச்சாளர் எனும் மோசமான சாதனை அவர் பெயரில் உள்ளது. முன்னதாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் வருண் 17 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார், ஆனால் அப்போட்டியிலும் இந்திய அணி தோல்வியை சந்திக்க வேண்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ் சாதனை சமன்

சர்வதேச டி20 போட்டிகளில் இந்தியாவுக்காக அதிக இன்னிங்ஸ்களில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை வருண் பெற்றுள்ளார். இந்த சாதனையை இரண்டாவது முறையாக எட்டுவதன் மூலம், அவர் புவனேஷ்வர் குமார் மற்றும் குல்தீப் யாதவின் சாதனையை சமன் செய்துள்ளார். முன்னதாக புவனேஷ்வர் குமார் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தலா இரண்டு முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

முதல் இந்திய வீரர்

Advertisement

மேற்கொண்டு இந்தியாவிலும், இந்தியாவிற்கு வெளியேயும் டி20 போட்டிகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர் எனும் சாதனையையும் அவர் படைத்துள்ளார். மேலும் சர்வதேச டி20 தொடரில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இன்னிங்ஸ்களில் 10 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய பந்து வீச்சாளர் எனும் சாதனையையும் வருண் சக்ரவர்த்தி படைத்துள்ளார். நடப்பு இங்கிலாந்து தொடரின் முதல் மூன்று போட்டிகளில் அவர் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

முன்னதாக, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் அவர் 12 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. இதுதவிர்த்து இப்போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவிய நிலையிலும் தனது சிறப்பான பந்துவீச்சின் காரணமாக வருண் சக்ரவர்த்தி ஆட்டநாயக விருதை வென்றார். இதன்மூலம் தோல்வியடைந்த போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்ற முதல் இந்திய பந்துவீச்சாளர் எனும் பெருமையையும் அவர் பெற்றுளது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி தோல்வி

Advertisement

இப்போட்டி குறித்து பேசியனால், டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி பென் டக்கெட் (51), லியாம் லிவிங்ஸ்டோன் (43) ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களைச் சேர்த்தது. அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா 40 ரன்களைச் சேர்த்த்தை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறியதன் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்த்தது. இதன்மூலம் இங்கிலாந்து அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News