விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இத்தொடரில் இன்று நடைபெற்ற 6ஆவது சுற்று ஆட்டத்தில் மும்பை மற்றும் புதுச்சேரி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய மும்பை அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. இதில் அணியின் தொடக்க வீரர்கள் அங்கிரிஷ் ரகுவன்ஷி முதல் பந்திலேயே விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான ஆயுஷ் மத்ரே ஒரு ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். பின்னர் களமிறங்கிய ஹர்திக் தோமர் 11 ரன்களுக்கும், சித்தேஷ் லாத் 34 ரன்களுக்கும், சூர்யகுமார் யாதவ் முதல் பந்திலேயும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் - அன்கொல்கர் இணை பொறுப்புடன் விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். 

Advertisement

இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் இப்போட்டியில் சதமடித்து அசத்தினார். அதேசமயம் மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அன்கொல்கர் 43 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் களமிறங்கிய சூர்யன்ஷ் 10 ரன்களுக்கும், ஷர்துல் தாக்கூர் 16 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்தனர். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 16 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 137 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்தார். இதன்மூலம் மும்பை அணி இன்னிங்ஸ் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 290 ரன்களைக் குவித்தது. 

புதுச்சேரி அணி தரப்பில் சகார் உதேஷி, கௌரவ் யாதவ், குர்விந்தர் சிங் மற்றும் அங்கித் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய புதுச்சேரி அணியில் தொடக்க வீரர்கள் முகமது அகிப் 8 ரன்களிலும், ஷ்யாம் காங்கேயன் 10 ரன்னிலும் விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த சந்தோஷ் மற்றும் ஆகாஷ் ஆகியோர் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் சந்தோஷ் 21 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் அடுத்து களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

ஒருபக்கம் விக்கெட்டுகள் இழந்தாலும் மறுமுனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆகாஷ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். பின் அவரும் 54 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய் வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் புதுச்சேரி அணி 27.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மும்பை தரப்பில் ஷர்தூல் தாக்கூர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் மும்பை அணி 163 ரன்கள் வித்தியாசத்தில் புதுச்சேரி அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News