2012ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் ஹோம் மற்றும் அவே போட்டிகள், ஐபிஎல் தொடர், உள்ளூர் போட்டிகள் உள்ளிட்டவற்றை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஒளிபரப்பி வந்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஒளிபரப்பு உரிமையை கைப்பற்றிய ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம், டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை ஜியோ நிறுவனத்திடம் இழந்தது.

Advertisement

இந்த நிலையில் அடுத்த 5 ஆண்டுகளில் இந்திய அணி 88 போட்டிகளில் சொந்த மண்ணில் விளையாட உள்ளது. இதற்கான ஒளிபரப்பு உரிமைக்கான பிசிசிஐ ஏலம் இன்று நடைபெற்றது. இந்த ஏலத்தில் டிஸ்னி ஸ்டார், சோனி, வியாகாம் 18 உள்ளிட்டவை களத்தில் இருந்தன. இதில் சோனி நிறுவனம் ஜீ நிறுவனத்துடன் கைகோர்த்ததால், ஏலத்தில் சுவாரஸ்யம் ஏற்பட்டது.

Advertisement

இந்த நிலையில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்தியாவில் இந்திய அணி விளையாடவுள்ள 88 போட்டிகளை ஒளிபரப்பும் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமையை வியாகாம் 18 நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மொத்தமாக ரூ.5,966.4 கோடிக்கு வியாகாம் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. ஒவ்வொரு போட்டிக்கும் சுமார் ரூ. 67.7 கோடி வழங்கப்படவுள்ளது. கடந்த முறை டிஸ்னி ஸ்டார் நிறுவனம் தரப்பில் ரூ. 6,138 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

ஒப்பந்தம் மதிப்பு குறைந்ததற்கு ஐசிசி தொடர்களின் எண்ணிக்கையும், ஐபிஎல் போட்டிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது காரணமாக பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம் மூலம் 2023 முதல் 2028 வரை இந்திய மண்ணில் இந்திய அணி விளையாடும் அத்தனை போட்டிகளையும் ஸ்போர்ட்ஸ் 18 நிறுவன தொலைக்காட்சியிலும், ஜியோ சினிமா டிஜிட்டல் ஓடிடி செயலியிலும் காண முடியும்.

அதேபோல் 2023 முதல் 2028 வரையிலான ஐபிஎல் தொடரை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியிலும், ஜியோ சினிமாஸ் ஓடிடியிலும் காண முடியும். அதேபோல் ஐசிசி 2024 முதல் 2027 வரையிலான ஐசிசி தொடர்களை ஜீ மற்றும் சோனி தொலைக்காட்சியிலும், ஹாட்ஸ்டார் ஓடிடியிலும் காண முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News