ஒரு ரன்னில் தோல்வி; ஆறுதல் கூறிய கோலி, சிராஜ்!

Updated: Wed, Apr 28 2021 12:34 IST
video-virat-kohli-and-mohammed-siraj-consoling-rishabh-pant (Image Source: Google)

நடப்பு ஐபிஎல் சீசனின் 22வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் நேற்று விளையாடின. அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டதில் முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 171 ரன்களை குவித்தது. 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டியது டெல்லி அணி.

டெல்லி அணியின் தொடக்க வீரர்கள் விரைவாக ஆட்டமிழந்த நிலையில் 32 பந்துகளில் 55 ரன்களுக்கு பந்த - ஹெட்மயர் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அவர்களது பார்ட்னர்ஷிப் டெல்லி அணியை ஆட்டத்திற்குள் கொண்டு வந்தது. 23 பந்துகளில் அரைசதம் விளாசினார் ஹெட்மைர். டெல்லி வெற்றி பெற கடைசி ஓவரில் 14 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அந்த ஓவரை சிராஜ் வீசி இருந்தார்.

ஆனால் அவர்களால் 12 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் டெல்லி அணி 1 ரன்னில் தோல்வியடைந்தது. ரிஷப் பந்த் - ஹெட்மையர் கடுமையாக போராடியும் தோற்றதால் இருவரும் மிகுந்த சோகத்துடனும் களத்திலிருந்தனர்.

இந்திய அணியின் செல்லப் பிள்ளை ரிஷப் பன்ட் சோர்வும் விரக்தியாகவும் இருந்ததை பார்த்த கோலியும், சிராஜூம் ஆறுதல் கூறியதுடன் உற்சாகப்படுத்தினார்கள். இதேபோல சிறப்பாக விளையாடிய ஹெட்மயருக்கும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை