தனிமையை நான் நன்கு அனுபவித்தவன் - விராட் கோலியின் உருக்கமான பேச்சு!

Updated: Wed, Aug 17 2022 22:52 IST
Virat Kohli opens up on mental health struggles, shares tips for athletes ahead of Asia Cup
Image Source: Google

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஆகஸ்ட் 27ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. இந்த தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தீவிரமாக தயாராகி வருகிறது.

இந்திய அணியில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்துள்ளது விராட் கோலியின் கம்பேக்கை பார்ப்பதற்காக தான். வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பங்கேற்பாமல் ஓய்வுக்கு சென்ற கோலி, நேரடியாக ஆசிய கோப்பையில் வருவேன் எனக்கூறி சென்றார். இதில் ஒருவேளை சொதப்பினால் டி20 உலகக்கோப்பையில் இருந்தே அவர் விலகும் சூழலும் உருவாகும்.

இந்நிலையில் தனது கடினமான சூழல் குறித்து விராட் கோலி பேசியுள்ளார். அதில், “ஒரு விளையாட்டு வீரருக்கு தொடர்ச்சியாக அழுத்தங்கள் வரும்போது மனரீதியாக நம்பிக்கையின்மை ஏற்படுகிறது. அந்த சமயங்களில் நாம் பலமாக இருக்க வேண்டும் என்பது மிக முக்கியம். இனி வரும் வீரர்கள், உடற்தகுதி நன்றாக வைத்துக்கொள்வது மற்றும் மீண்டு வருவதற்கு தொடர் முயற்சிகளை மட்டும் வைத்திருந்தால், சிறந்த விளையாட்டு வீரராக இருப்பார்.

தனிமையை நான் நன்கு அனுபவித்தவன். ஒரு அறை முழுக்க எனக்காக சிலர் பாசத்துடன் இருந்த போதும், நான் தனியாக இருப்பது போன்று தான் உணர்ந்துள்ளேன். எனவே நமக்காக சற்று நேரத்தை எடுத்துக்கொண்டு தயாராகுங்கள். அப்படி முயற்சி செய்வதை நிறுத்திவிட்டால், பின்னர் பிரச்சினைகளை சரிசெய்வது என்பது கடினமாகிவிடும். கடுமையான சூழல்களை கையாண்டு பழக்கமாக்கி கொள்ளுங்கள் அப்போது உங்கள் பணி சுலபமாகும்” என கோலி தெரிவித்துள்ளார்.

ஓய்வில் இருந்து வந்த விராட் கோலி சமீபத்தில் தான் ஆசிய கோப்பை தொடருக்கான பயிற்சியை தொடங்கினார். இன்று அவர் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபடும் புகைப்படங்கள் இணையத்தை கலக்கியது. எனவே கோலி, தனக்கு மிகவும் எதிர்க்க பிடித்த பாகிஸ்தான் அணிக்கு எதிராக அதிரடி காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை