ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று மும்பையில் நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா அதிரடியான ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கத்தை கொடுத்தார்.

Advertisement

குறிப்பாக 4 பவுண்டரி 4 சிக்சருடன் அதிரடியாக 47 ரன்கள் குவித்து அவுட்டான அவருக்கு பின் வந்த விராட் கோலி கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுபுறம் தம்முடைய பங்கிற்கு மிகச் சிறப்பாக விளையாடிய சுப்மன் கில் அரை சதம் கடந்து 8 பவுண்டரி 3 சிக்சருடன் 79 ரன்கள் அடித்திருந்த நிலையில் மும்பை நிலவிய அதிகப்படியான வெப்பத்தை தாங்க முடியாமல் தசைபிடிப்பு காரணமாக பாதியிலேயே பெவிலியன் திரும்பினார்.

Advertisement

அந்த நிலைமையில் வந்த ஸ்ரேயாஸ் ஐயர் தம்முடைய பங்கிற்கு அதிரடியாக விளையாட நிலையில் மறுபுறம் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய விராட் கோலியும் அரை சதம் கடந்து நியூசிலாந்து பவுலர்களுக்கு சவாலை கொடுத்தார். நேரம் செல்ல செல்ல நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் தம்முடைய 50ஆவது சதத்தை அடித்து ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் வாழ்நாள் உலக சாதனையை உடைத்தார்.

இதற்கு முன் சச்சின் 452 இன்னிங்ஸில் 49 சதங்கள் அடித்திருந்த நிலையில் விராட் கோலி 259 இன்னிங்சிலேயே 50 ஓவர் கிரிக்கெட்டில் 50 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற மாபெரும் உலக சாதனை படைத்தார். அதுமட்டுமல்லாமல் இந்த உலகக் கோப்பையில் மொத்தம் 700* ரன்கள் குவித்துள்ள அவர் உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் மற்றுமொரு வாழ்நாள் சாதனையை உடைத்தார்.

இதற்கு முன் 2003 உலகக்கோப்பையில் 673 ரன்கள் அடித்து சச்சின் படைத்த சாதனையை 2019இல் ரோஹித், வார்னர் போன்றவர்கள் நெருங்கியும் தொட முடியவில்லை. இருப்பினும் தற்போது அதையும் உடைத்துள்ள விராட் கோலி ஒரு உலகக் கோப்பையில் அதிக முறை 50க்கும் மேற்பட்ட ரன்கள் விளாசிய வீரர் என்ற உலக சாதனையும் படைத்துள்ளார். இதற்கு முன் சச்சின் (2003) மற்றும் ஷாகிப் அல் ஹசன் (2019) தலா 7 முறை 50+ ரன்கள் அடித்திருந்ததே முந்தைய சாதனையாகும்.

 

Advertisement

மேலும் உலக கோப்பையில் ஒரு தொடரில் 700 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையும் படைத்த அவர் தலைவணங்கிய போது பெவிலியனிலிருந்து சச்சின் கைதட்டி பாராட்டினார். இறுதியில் 9 பவுண்டர் 2 சிக்சருடன் 117 ரன்கள் விளாசிய விராட் கோலி இந்தியா 300 ரன்கள் தாண்டுவதற்கு உதவி ஆட்டமிழந்தார். இந்நிலையில் இக்காணொளிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.  

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News