சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாட விருப்பம் தெரிவித்த டேவிட் வார்னர்!
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது கோப்பையை வென்று சாதனைப்படைத்தது. அதேசமயம் இத்தொடரில் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக கணிக்கப்பட்ட ஆஸ்திரேலிய அணியானது சூப்பர் 8 சுற்றில் அடைந்த அடுத்தடுத்த தோல்விகளின் காரணமாக அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் சூப்பர் 8 சுற்றோடு வெளியேறியது.
இதனையடுத்து இந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருடன் அந்த அணியின் அதிரடி தொடக்க வீரர் டேவிட் வார்னர் சர்வாதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார். முன்னதாக வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும், அதற்கு முன்பு இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு பிற்கும் என சர்வதே ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் வார்னர் ஓய்வை அறிவித்திருந்தார்.
இந்நிலையில் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட டேவிட் வர்னர் விருப்பம் தெரிவித்துள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளனது. ஏனெனில் ஆஸ்திரேலிய அணிக்காக இதுநாள் வரை டி20 உலகக்கோப்பை, ஒருநாள் உலகக்கோப்பை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்களை வென்றுள்ள வார்னர் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் மட்டும் கோப்பையை வெல்லாதது குறிப்பிடத்தக்கது.
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
இதன் காரணமாக அவர் வரவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். அந்தவகையில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரானது மார்ச் மாதம் முடிவடையவுள்ளது. மேலும் இத்தொடருக்கு முன்னதாக பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.