தென் ஆப்பிரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி க்கெபெர்ஹாவில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி ரியான் ரிக்கெல்டன், கைல் வெர்ரைன் ஆகியோரது சதம் காரணமாக முதல் இன்னிங்ஸில் 358 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. 

Advertisement

இதையடுத்து முதல் இன்னிங்ஸை விளையாடிய இலங்கை அணியில் பதும் நிஷங்க 89 ரன்களையும், தினேஷ் சண்டிமா, ஏஞ்சாலோ மேத்யூஸ் ஆகியோர் தலா 44 ரன்களையும் சேர்த்ததன் கரணமாக 328 ரன்களைச் சேர்த்தது. தென் ஆப்பிரிக்க அணி சார்பில் டேன் பாட்டர்சன் 5 விக்கெட்களை வீழ்த்தினார். கேசவ் மகாராஜ், மார்கோ யான்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 30 ரன்கள் முன்னிலைப் பெற்றது. 

Advertisement

அதன்பின் இரண்டாவது இன்னிங்சைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் கேப்டன் டெம்பா பவுமா 66 ரன்களையும், ஐடன் மார்க்ரம் 55 ரன்களையும் சேர்க்க, இரண்டாவது இன்னிங்ஸில் 317 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இலங்கை தரப்பில் பிரபாத் ஜெயசூர்யா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து 348 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணி நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ரன்களைச் சேர்த்துள்ளது.

 

இதில் தனஞ்செயா டி சில்வா மற்றும் குசால் மெண்டிஸ் ஆகியோர் தலா 39 ரன்களுடன் களத்தில் உள்ளனர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் கேசவ் மஹாராஜ், டேன் பீட்டர்சென் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். இதையடுத்து 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இலங்கை அணி நாளை 5ஆம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் தென் ஆப்பிரிக்க வீரர் கைல் வெர்ரைன் பிடித்த கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

அந்தவகையில் இலங்கை அணியின் நட்சத்திர வீரர் கமிந்து மெண்டிஸ் 35 ரன்களைச் சேர்த்த நிலையில் கேசவ் மஹாராஜ் பந்தை தடுத்து விளையாட முயற்சித்தார். ஆனால் பந்து அவரது பேட்டில் பட்டு பின் பக்கமாக சென்ற நிலையில், அதனை சரியாக கணித்த கைல் வெர்ரையன் அற்புதமான கேட்ச்சை பிடித்து ஆட்டமிழக்கச் செய்தார். இந்நிலையில் தான் கைல் வெர்ரைனின் இக்காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News