இங்கிலாந்து - இந்தியா மகளிர் அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று பர்மிங்ஹாமில் நடைபெற்றது. இப்போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணியை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பதிவுசெய்தது. 

Advertisement

இருப்பினும் இந்திய அணி ஏற்கெனவே மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றதன் காரணமாக 3-2 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றியது. மேலும் இப்போட்டியில் இங்கிலாந்தின் சார்லீ டீன் ஆட்டநாயகி விருதையும், இந்திய அணியின் ஸ்ரீ சாரனி தொடர்நாயகி விருதையும் வென்றனர். இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணி வீராங்கனை ராதா யாதவ் பிடித்த அபாரமான கேட்ச் ஒன்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. 

Advertisement

அதன்படி இன்னிங்ஸின் 20ஆவது ஓவரை இந்திய வீராங்கனை அருந்ததி ரெட்டி வீசிய நிலையில், ஓவரின் மூன்றாவது பந்தை எதிர்கொண்ட ஏமி ஜோன்ஸ் ஸ்லாக் ஸ்வீப் ஷாட்டை அடிக்க முயன்றார். அப்போது டீப் மிட் விக்கெட் திசையில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த ராதா யாதவ் அபாரமான கேட்சைப் பிடித்து ஏமி ஜோன்ஸின் விக்கெட்டை வீழ்த்தினார். இந்நிலையில் ராதா யாதவ் பிடித்த இந்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இப்போட்டி குறித்து பேசினால் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணியில் தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்ததுடன் 75 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீராங்கனைகளில் ரிச்சா கோஷ் 24 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்றவர்கள் சோபிக்க தவறினர். இதனால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களை மட்டுமே சேர்த்தது. 

Also Read: LIVE Cricket Score

அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீராங்கனைகள் சோஃபியா டங்க்லி மற்றும் டேனியல் வைட் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 101 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதில் டேனியல் வைட் 56 ரன்களையும், சோஃபியா டங்க்லி 46 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்த நிலையிலும் இங்கிலாந்து மகளிர் அணி கடைசி பந்தில் இலக்கை எட்டி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது குறிப்பிடத்தக்கது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News