ராஜ்கோட்டில் உள்ள நிரஞ்சன் ஷா மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லரின் கேட்ச்சை பிடித்ததன் மூலம் முன்னாள் வீரர் மகேந்திர சிங் தோனியை இந்திய ரசிகர்களுக்கு நினைவூட்டினார்.

Advertisement

உண்மையில், இந்தப் போட்டியில், சஞ்சு விக்கெட்டுக்குப் பின்னால் ஜோஸ் பட்லரின் அற்புதமான கேட்சை பிடித்து அவரை ஆட்டமிழக்கச் செய்தார். இது மட்டுமல்லாமல், இந்த நேரத்தில் சஞ்சு நடுவரின் முடிவை தவறாக நிரூபித்து தனது அணிக்கு ஒரு பெரிய வெற்றியைக் கொடுத்தார். இந்த முழு சம்பவமும் இங்கிலாந்து இன்னிங்ஸின் 9ஆவது ஓவரில் நடந்தது. அந்தவகையில் அந்த ஓவரை இந்திய அணி தரப்பில் வருண் சக்ரவர்த்தி வீசினார். 

Advertisement

அப்போது அந்த ஓவரின் கடைசி பந்தை லெக் ஸ்டம்புக்கு வெளியே வீசிய நிலையில் அதனை எதிர்கொண்ட ஜோஸ் பட்லர் ரிவர்ஸ் ஸ்வீப் மூலம் பவுண்டரி அடிக்க முயற்சித்தார். ஆனால் பந்து அவர் எதிர்பார்த்ததை விட வேகமாக வந்த காரணத்தால் பந்தை அவரால் சரியாக அடிக்க முடியவில்லை. அதனால் பந்து அவரது கையுரையின் மேல் லேசாக உராசி ஸ்டம்பிற்கு பின்னால் இருந்த சஞ்சு சாம்சன் கைகளில் தஞ்சமடைந்தது.

இதனையடுத்து களநடுவரிம் சஞ்சு சாம்சனும் அவுட்டிற்காக அப்பில் செய்த நிலையில் நடுவர் நாட் அவுட் என்ற தீர்ப்பை வழங்கினார். அதன் பிறகு, சஞ்சு சாம்சன் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவிடம் டி.ஆர்.எஸ் எடுக்கும்படி வற்புறுத்துகிறார். சஞ்சுவின் கோரிக்கை ஏற்ற சூர்யகுமார் யாதவ் டிஆர்எஸ் எடுத்தார். இதனையடுத்து மூன்றாம் நடுவரின் சோதனையில் பந்து ஜோஸ் பட்லரின் கையுரையில் பட்டது தெளிவாக தெரிந்ததை அடுத்து அவுட் என்ற தீர்ப்பை வழங்கினார்.

இதனால் இப்போட்டியில் ஜோஸ் பட்லர் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்சருடன் 24 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழந்த ஏமாற்றத்துடன் பெவிலியனுக்கு திரும்பினார். இந்நிலையில் சஞ்சு சாம்சனின் அபாரமான கேட்ச் குறித்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

இப்போட்டி குறித்து பேசியனால், டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி பென் டக்கெட் (51), லியாம் லிவிங்ஸ்டோன் (43) ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களைச் சேர்த்தது. அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா 40 ரன்களைச் சேர்த்த்தை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறியதன் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்த்தது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News