பாபர் ஆசாமை க்ளீன் போல்டாக்கிய சிராஜ் - வைரலாகும் காணொளி!

Updated: Sat, Oct 14 2023 17:50 IST
பாபர் ஆசாமை க்ளீன் போல்டாக்கிய சிராஜ் - வைரலாகும் காணொளி! (Image Source: Google)

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இன்று கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். 

அதன்படி பாகிஸ்தான் அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களாக வந்த அப்துல்லா சபிக்கை 20 ரன்களில் முகமது சிராஜ் எல்பிடபிள்யு மூலம் வெளியேற்றினார். மற்றும் ஒரு துவக்க ஆட்டக்காரர் இமாம் உல் ஹக்கை 36 ரன்களில் கேஎல்.ராகுல் மூலம் ஹர்திக் பாண்டியா வெளியேற்றினார்.

இதற்கு அடுத்து பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர்கள் கேப்டன் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் இருவரும் ஜோடி சேர்ந்து பொறுமையாக அணியை கொஞ்சம் கொஞ்சமாக மீட்டு எடுக்க ஆரம்பித்தார்கள். இந்த ஜோடி மிகச் சிறப்பாக விளையாடி அழைத்ததத்தை தாண்டி பார்ட்னர்ஷிப்பை நீட்டிக்கொண்டு சென்றது. மேலும் இந்தியாவுக்கு எதிராக முதல் முறையாக பாபர் அசாம் அரைசதத்தை தொட்டார்.

இந்த நிலையில் கேப்டன் ரோஹித் சர்மா இரண்டாவது ஸ்பெல்லுக்கு முகமது சிராஜை கொண்டு வந்தார். அந்த ஓவரில் 10 ரன்கள் தாண்டி அவர் ரன் கொடுத்தார். மீண்டும் இரண்டாவது ஓவருக்கு வந்த சிராஜ் அற்புதமான லைன் மற்றும் லென்த்தில் ஆப் ஸ்டெம்பை தட்டி பாபர் அசாமை கிளீன் போல்ட் ஆக்கினார். பாபர் அசாம் அரை சதம் அடித்த நிலையில் 50 ரன்களில் வெளியேறினார்.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ICC (@icc)

இதனால் அடுத்தடுத்து வந்த வீரர்களாலும் இந்திய பந்துவீச்சுகு ஈடுகொடுக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்ப, பாகிஸ்தான் அணி 191 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தனர். இந்நிலையில் பாபர் அசாமின் விக்கெட்டை முகமது சிராஜ் வீழ்த்திய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.  

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை