ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2025ஆம் ஆண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் முக்கியமான லீக் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

Advertisement

லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இப்போட்டிக்கான இரு அணிகளிலும் எந்த மாற்றமும் இன்று கடந்த ஆட்டத்தில் விளையாடிய வீரர்களே இடம்பிடித்துள்ளன. மேற்கொண்டு இப்போட்டியில் வெற்றிபெறும் அணி அரையிறுதிக்கு முன்னேறும் என்பதால், இந்த வாழ்வா சாவா ஆட்டத்தில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Advertisement

அதன்படி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் ஸத்ரான் இணை தொடக்கம் கொடுத்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஸ்பென்சர் ஜான்சன் வீசினார். இதில் இன்னிங்ஸின் 4ஆவது பந்தை ஜான்சன் அபாரமான யார்க்கராக வீசிய நிலையில் அதனை சற்றும் எதிர்பார்க்காத குர்பாஸ் பந்தை முழுமையாக தவறவிட்டதுடன், க்ளீன் போல்டாகினார். 

இதனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குர்பாஸ் ரன்கள் ஏதுமின்றி தனது விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இந்நிலையில் ரஹ்மனுல்லா குர்பாஸை க்ளீன் போல்டாக்கிய ஸ்பென்சன் ஜான்சனின் காணொளி வைரலாகி வருகிறது. அதன்பின் ஸத்ரானுடன் இணைந்துள்ள செதிகுல்லா அடல் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதன்மூலம் இருவரின் பார்ட்னர்ஷிப்பும் 50 ரன்களைக் கடந்துள்ளது. 

ஆஃப்கானிஸ்தான் பிளேயிங் லெவன்: ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், செதிகுல்லா அடல், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கேப்டன்), அஸ்மதுல்லா ஒமர்சாய், குல்பதின் நைப், முகமது நபி, ரஷித் கான், ஃபசல்ஹாக் ஃபரூக்கி, நூர் அகமது.

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

ஆஸ்திரேலியா பிளேயிங் லெவன்: மேத்யூ ஷார்ட், டிராவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), மார்னஸ் லபுஷாக்னே, ஜோஷ் இங்கிலிஸ், அலெக்ஸ் கேரி,கிளென் மேக்ஸ்வெல், பென் துவார்ஷூயிஸ், நாதன் எல்லிஸ், ஆடம் ஸாம்பா, ஸ்பென்சர் ஜான்சன்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News