ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் லீக் சுற்றில் முடிவில் நேபாள் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் வெளியேறிய நிலையில் இந்தியா, பாகிஸ்தான், நடப்பு சாம்பியன் இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. அதைத்தொடர்ந்து செப்டம்பர் 6ஆம் தேதி துவங்கிய சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில் வங்கதேசத்தை தங்களுடைய சொந்த மண்ணில் எதிர்கொண்ட பாகிஸ்தான் 7 விக்கெட் எளிதான வெற்றி பெற்றது.

Advertisement

கடாபி நகரில் நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் எதிர்பார்த்தது போலவே பாகிஸ்தானின் தரமான பந்து வீச்சில் போராடி 38.4 ஓவரில் 193 ரன்ளுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணிக்கு அதிகபட்சமாக முஸ்பிகர் ரஹீம் 64 ரன்களும் கேப்டன் சாகிப் அல் ஹசன் 53 ரன்களும் எடுக்க பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஹரிஷ் ரவூப் 4 விக்கெட்களையும் நாசீம் ஷா 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

Advertisement

அதைத்தொடர்ந்து 194 ரன்களை துரத்திய பாகிஸ்தானுக்கு பகர் ஸமான் 20 ரன்களும் கேப்டன் பாபர் ஆசாம் 17 ரன்களில் அவுட்டாக்கி ஏமாற்றத்தை கொடுத்தாலும் மற்றொரு தொடக்க வீரர் இமாம்-உல்-ஹக் 78 ரன்களும் முகமது ரிஸ்வான் 63 ரன்களும் எடுத்து 39.3 ஓவரிலேயே எளிதான வெற்றியை பெற்றுக் கொடுத்தனர். அதனால் சூப்பர் 4 சுற்றில் முதல் வெற்றியைப் பெற்ற பாகிஸ்தான் நம்முடைய அடுத்த போட்டியில் வரும் செப்டம்பர் 10ஆம் தேதி பரம எதிரி இந்தியாவை மீண்டும் எதிர்கொள்கிறது.

இதைத் தொடரில் இலங்கையின் கண்டி நகரில் நடைபெற்ற லீக் சுற்றுப்போட்டியில் பந்து வீச்சில் அபாரமாக செயல்பட்ட பாகிஸ்தான் 66/4 என ஆரம்பத்திலேயே இந்தியாவை தெறிக்க விட்டது. இருப்பினும் இஷான் கிஷான் – பாண்டியா ஆகியோர் ஓரளவு காப்பாற்றியதால் 267 ரன்களை சேசிங் துவங்கிய அந்த அணியை மழை வந்து தடுத்தது அனைவருக்கும் ஏமாற்றமாக அமைந்தது. இந்நிலையில் இந்த போட்டியில் பெற்ற வெற்றி சூப்பர் 4 சுற்றில் இந்தியாவை எதிர்கொண்டு வீழ்த்த பெரிய தன்னம்பிக்கையை கொடுத்துள்ளதாக கேப்டன் பாபர் அசாம் கூறியுள்ளார்.

எனவே அப்போட்டியில் தங்களுடைய 100% செயல்பாடுகளை வெளிப்படுத்தி நிச்சயம் இந்தியாவை தோற்கடிப்போம் என்று மறைமுகமான எச்சரிக்கையும் விடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “இன்றைய நாளில் அதிக வெப்பம் இருந்தும் எங்களுடைய வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். முதலில் ஷாஹீன் பின்னர் ஹரிஷ் ரவூப் ஆகியோர் சிறப்பாக பந்து வீசினர். மேலும் இப்போட்டியின் பிட்ச்சை பார்த்த பின் நாங்கள் பகிம் அஸ்ரப்பை தேர்வு செய்ய முடிவை எடுத்தோம்”

அத்துடன் இப்போட்டியில் எங்களுக்கு எப்போதும் போல சொந்த ரசிகர்களின் ஆதரவு அதிகமாகவே இருந்தது நாங்களும் அவர்களை மகிழ்வித்திருப்போம் என்று நம்புகிறேன். இந்த வெற்றி எங்களுக்கு மிகப்பெரிய தன்னம்பிக்கையை கொடுத்துள்ளது. அதனால் நாங்கள் எப்போதுமே மிகப்பெரிய போட்டிகளுக்கு தயாராக இருக்கிறோம். எனவே இந்தியாவுக்கு எதிரான அடுத்த போட்டியில் எங்களுடைய 100% செயல்பாடுகளை கொடுத்து வெற்றி பெறுவோம்” என்று கூறினார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News