எங்கள் வெற்றியை மழை பறித்துவிட்டது - ஜோ ரூட்

Updated: Mon, Aug 09 2021 11:35 IST
Image Source: Google

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மழை காரணமாக டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.

இப்போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டத்தின் போது இந்திய அணி வெற்றி பெற 157 ரன்கள் மட்டுமே தேவை பட்டது. மேலும் இந்திய அணியின் கைவசம் 9 விக்கெட்டுகளும் இருந்தன. இதனால் இந்திய அணியின் வெற்றியை மழை தடுத்துவிட்டது என சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், இந்தியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் நாங்கள் பெற வேண்டிய வெற்றியை மழை பறித்துவிட்டது என இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் தெரிவித்துள்ள ரசிகர்கள் மத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. 

இதுகுறித்து பேசிய ரூட்,“என் கண்ணோட்டத்தில், இப்போட்டியில் நாங்கள் 40 ஓவர்களையாவது பெறுவோம் என தோன்றியது. அப்படி இருந்திருந்தாலும் எங்களால் நிச்சயம் 9 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணி வீழ்த்தியிருக்க முடியும் என நினைத்தோம். 

அதற்காக இந்திய அணியை நாங்கள் குறைத்து கூறவில்லை. ஆனால் எங்களது கண்டிஷனில் தொடர்ச்சியாக இரண்டு விக்கெட்டுகள் வீழ்ந்தால் என் நடக்கும் என்பது எங்களுக்கு நன்றாக தெரியும்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை