உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் எந்தெந்த அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஒரு பிரிவில் இரண்டு அணிகள் மட்டுமே தகுதி பெற முடியும் என்பதால் சிறந்த அணிகள் கூட வெளியேறும் நிலை ஏற்பட்டது.

Advertisement

இந்தியா இடம் பிடித்துள்ள குரூப் 2இல் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், வங்கதேசம், ஜிம்பாப்வே, நெதர்லாந்து அணிகள் உள்ளது. இந்தியாவை தென் ஆப்பிரிக்கா வீழ்த்தியதன் காரணமாக வங்கதேசம், பாகிஸ்தான் அணிகளுக்கான அரையிறுதி வாய்ப்பு சற்று மங்கிய நிலையில் உள்ளது. இந்தியாவும் அடுத்த இரண்டு போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

Advertisement

இந்நிலையில் இந்திய அணி நாளை வங்காதேசத்துடன் மோதுகிறது. அதைத்தொடர்ந்து 6ஆம் தேதி ஜிம்பாப்வே உடன் மோதுகிறது. இரண்டிலும் வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு முன்னேறுவது உறுதி. ஒன்றில் தோல்வியடைந்து மற்றொன்றில் வெற்றி பெற்றால், மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்.

அதேசமயம் வங்கதேச அணி அடுத்தடுத்த போட்டிகளில் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுடன் மோத உள்ளது. இரண்டில் ஒன்றில் வெற்றி பெற்றால் கூட அந்த அணிக்கு அரையிறுதிக்கு தகுதி வாய்ப்பு கிடைக்கும். ஆனால் வங்கதேச அணி விளையாட இருக்கும் எதிரணிகள் பலம் வாய்ந்தவை. மேலும் உலகக் கோப்பையை வெல்வதற்கு தகுதியான அணி எனக் கணிக்கப்பட்டவை. 

ஆகவே, வங்கதேசத்திடம் இந்தியாவோ அல்லது பாகிஸ்தானோ தோல்வியடைந்தால், அது இரண்டு அணிகளுக்கும் மிகப்பெரிய தடையை உருவாக்கும். இந்த நிலையில், இந்தியாவை வீழ்த்தினால் அது எங்களக்கு வருத்தமாகத்தான் இருக்கும் என வங்கதேச அணி கேப்டன் ஷாகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார்.

இதுகிறித்து பேசியுள்ள ஷாகிப் அல் ஹசன், “ஒவ்வொரு போட்டியும் எங்களுக்கு முக்கியமானது. நாங்கள் இந்த அணுகுமுறையுடன் விளையாட விரும்புகிறோம். ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக கவனம் செலுத்த விரும்பவில்லை. நாங்கள் எங்களுடைய திட்டத்தில் உறுதியாக இருக்க விரும்புகிறோம். உலகக்கோப்பையில் எங்களுடைய வீரர்களில் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலைப்படவில்லை. போட்டியில் அனைத்து துறையிலும் ஒரு அணியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த கவனம் வெலுத்துகிறோம்.

Advertisement

மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் சிறப்பாக விளையாட விரும்புகிறோம். இந்தியா அல்லது பாகிஸ்தானுக்கு எதிராக நாங்கள் வெற்றி பெறும் வாய்ப்பு கிடைத்தால், அது வருத்தமான விஷயமாகத்தான் இருக்கும். இந்தியா, பாகிஸ்தான் அணிகள் எங்களுடன் சிறந்த அணி. நாங்கள் சிறப்பாக விளையாடி, எங்களுடைய நாளாக அமைந்தால், நாங்கள் வெற்றி பெற முடியாததற்கான காரணம் இருக்க முடியாது. அயர்லாந்து, ஜிம்பாப்வே போன்ற அணிகள் இங்கிலாந்தையும், பாகிஸ்தானையும் வீழ்த்தியதை நாம் பார்த்திருக்கிறோம். அதே வாய்ப்பு எங்களுக்கும் கிடைத்தால், நான் மகிழ்ச்சியடைவேன்.

இந்தியாவுக்கு எதிரான நாளைய போட்டியை காண மைதானம் முழுவதும் ரசிகர்கள் நிறைந்து இருப்பார்கள் என நினைக்கிறேன். ஏனென்றால், இந்தியா எங்கே விளையாடினாலும், ரசிகர்கள் அவர்களுக்கு சிறப்பான ஆதரவு கொடுக்கிறார்கள். சிறந்த ஆட்டமாக இருக்கும் என நினைக்கிறேன். போட்டியில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. அவர்கள் உலகக் கோப்பையை வெல்வதற்காக இங்கே வந்துள்ளனர். நாங்கள் உலகக் கோப்பையை வெல்வதற்காக இங்கே வரவில்லை.

இந்தியாவுக்கு எதிராக நாங்கள் வெற்றி பெற்றால், அது வருத்தமாக இருக்கும். இந்தியாவுக்கு எதிராக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி, அவர்களுக்கு அப்செட் அடைய செய்ய முயற்சி செய்வோம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள முடியும். இந்திய அணிக்காக சூர்யகுமார் யாதவ் சிறப்பாக விளையாடி வருகிறார். கடந்த ஆண்டு சாதனையின்படி அனேகமாக, அவர் நம்பர் 1 வீரராக இருப்பார் என நினைக்கிறேன். 

Advertisement

மேலும், உலகத் தரம் வாய்ந்த வீரர்களும் இந்திய அணியில் உள்ளனர். நாங்கள் இன்னும் ஆலோசனை கூட்டம் போடவில்லை. ஆலோசனை செய்த பின், எந்த இடத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்பது குறித்து பேசுவோம். நாங்கள் வெற்றி பெற விரும்பினால், அனைத்து துறையிலும் கவனம் செலுத்த வேண்டும்'' என்றார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News