நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை விளையாடவில்லை - ஹர்மன்பிரீத் கவுர்!

Updated: Sat, Oct 05 2024 09:26 IST
Image Source: Google

ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வ்ருகிறது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற 4ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தினர். இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த லீக் போட்டியில் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் டாச் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து மகளிர் அணி கேப்டன் சோஃபி டிவைனின் அதிரடியான அரைசதத்தின் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 160 ரன்களை குவித்தது.  இதில் அதிகபட்சமாக சோஃபி டிவைன் 57 ரன்களையும், ஜார்ஜியா பிளிம்மர் 34 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா சிங் 2 விக்கெட்களை கைப்பற்றினார். 

இதைனையடுத்து 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் டாப் ஆர்டர் வீராங்கனைகள் நியூசிலாந்தின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் இந்திய மகளிர் அணி 19 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளை இழந்து 102 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நியூசிலாந்து தரப்பில் ரோஸ்மேரி மெய்ர் 4 விக்கெட்டும், லீ தஹுஹு 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதன்மூலம் நியூசிலாந்து மகளிர் அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணியை வீழ்த்தியதுடன், நடப்பு உலகக்கோப்பை தொடரையும் வெற்றியுடன் தொடங்கியுள்ளது. மேலும் இப்போட்டியில் அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்த சோஃபி டிவைன் ஆட்டநாயகியாக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் சிறந்த கிரிக்கெட்டை விழையாடாததே தோல்விக்கு காரணம் என்று இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “இன்று நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை விளையாடவில்லை. முன்னோக்கிச் செல்லும்போது நாம் எந்தெந்தப் பகுதிகளை மேம்படுத்த வேண்டும் என்பதைச் சிந்திக்க வேண்டும். இந்த தொடரில் ஒவ்வொரு ஆட்டமும் முக்கியமானது, நாங்கள் எங்கள் சிறந்த கிரிக்கெட்டை விளையாட வேண்டும். நாங்கள் வெற்றிக்கான வாய்ப்புகளை உருவாக்கிய நிலையிலும், அவர்கள் எங்களை விட சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் என்பதில் சந்தேகமில்லை.

Also Read: Funding To Save Test Cricket

அதேசமயம் உலகக்கோப்பை போன்ற தொடரில் நீங்கள் இதுபோன்ற தவறுகளை செய்வது மிகவும் மோசமான ஒன்றாகும். ஏனெனில் நாங்கள் பலமுறை 160-170 ரன்களை துரத்தியதுடன் அதில் வெற்றியையும் பெற்றுள்ளோம். ஆனால் இந்த ஆடுகளத்தில் நாங்கள் எதிர்பார்த்ததை விட 10-15 ரன்கள் அதிகமாக கொடுத்துவிட்டோம். ஒரு கட்டத்தில், அவர்கள் தொடங்கிய விதத்தில், அது 180 ஆக இருக்கும் என்று நான் நினைத்தேன். இது நாங்கள் எதிர்பார்த்த தொடக்கம் அல்ல” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை