ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றுபெங்களூருவில் நடைபெற்ற போட்டியில் இலங்கையை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த நியூசிலாந்து செமி ஃபைனல் வாய்ப்பை 99% உறுதி செய்தது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி 46.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 171 ரன்கள் மட்டுமே எடுத்தது.

Advertisement

அதிகபட்சமாக குசால் பெரேரா 51 ரன்களும், மஹீஷ் தீக்‌ஷனா 38 ரன்கள் எடுக்க நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக ட்ரெண்ட் போல்ட் 3 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத்தொடர்ந்து 172 ரன்களை துரத்திய நியூசிலாந்துக்கு டேவோன் கான்வே 45, ரச்சின் ரவீந்திரா 42, டார்ல் மிட்சேல் 43 ரன்கள் எடுத்து 23.2 ஓவரிலேயே எளிதாக வெற்றி பெற வைத்தனர்.

Advertisement

அதனால் அதிகபட்சமாக ஏஞ்சேலோ மேத்யூஸ் 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியாத இலங்கை ஆறுதல் வெற்றி கூட பெறாமல் இத்தொடரிலிருந்து பரிதாபமாக நாடு திரும்ப உள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் முதல் 10 ஓவரிலேயே 4 விக்கெட்டுகளை இழந்ததால் தோல்வி கிடைத்ததாக இலங்கை கேப்டன் குசால் மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.

ஒருவேளை பவர் பிளே ஓவர்களில் சிறப்பாக விளையாடியிருந்தால் பேட்டிங்க்கு சாதகமான இந்த பிட்ச்சில் 300 ரன்கள் எடுத்திருப்போம் என்றும் அவர் கூறியுள்ளார். அப்படி 300+ ரன்களை இலக்காக நிர்ணயித்திருந்தால் 5 விக்கெட்டுகளை எடுத்த தங்களுடைய பவுலர்கள் எஞ்சிய 5 விக்கெட்டுகளையும் எடுத்து நியூசிலாந்தை தோற்கடித்திருப்பார்கள் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “முதல் 10 ஓவர்களிலேயே நாங்கள் 4 விக்கெட்டுகளை இழந்தோம். அது தான் எங்களுக்கு இவ்வளவு பெரிய சிரமத்தை ஏற்படுத்தியது. அதை சரியாக செய்திருந்தால் எளிதாக இந்த பிட்ச்சில் 300 ரன்கள் அடித்திருப்போம். பேட்டிங்க்கு சாதகமான இந்த மைதானத்தில் விக்கெட்டுகளை எடுப்பது கடினமாக இருந்தது. ஆனால் அதிலும் மதுசங்கா சிறப்பாக பந்து வீசினார். இருப்பினும் நாங்கள் குறைந்த இலக்கை மட்டுமே நிர்ணயித்தோம்.

இத்தொடரில் எனக்கு கிடைத்த கேப்டன்ஷிப் பதவியை மகிழ்ச்சியாக செய்தேன். ஆனால் என்னுடைய சொந்த செயல்பாடுகளில் ஏமாற்றத்தை சந்தித்தேன். மொத்தத்தில் இத்தொடரில் மகிழ்ச்சியாக விளையாடினேன். எங்களுடைய சில வீரர்கள் இத்தொடரில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியதை பார்த்தது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று கூறியுள்ளார். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News