பேட்டிங்கில் சிறப்பாக செயல்படாததே தோல்விக்கு காரணம் - தீப்தி சர்மா!

Updated: Mon, Feb 17 2025 10:43 IST
Image Source: Google

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற 3வது லீக் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் யுபி வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வாரியர்ஸ் அணியில் கேப்டன் தீப்தி சர்மா 39 ரன்களையும், உமா சேத்ரி 24 ரன்களையும் சேர்த்தை தவிர்த்து மற்ற வீராங்கனைகள் சோபிக்க தவறினர். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்களை மட்டுமே சேர்த்தது. 

குஜராத் சார்பில் பிரியா மிஸ்ரா 3 விக்கெட்டுகளையும், டியாண்டிரா டோட்டின், ஆஷ்லே கார்ட்னர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதையடுத்து, 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் அணியில் பெத் மூனி, ஹேமலதா ஆகியோர் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, நட்சத்திர வீராங்கனைகள் லாரா வோல்வார்ட் 22 ரன்களையும், கேப்டன் ஆஷ்லே கார்ட்னர் அரைசதம் கடந்ததுடன் 52 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்தனர். 

இதனைத்தொடர்ந்து களமிறங்கிய டியாண்டிரா டோட்டின் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 33 ரன்களையும், ஹர்லீன் தியோல் 4 பவுண்டரிகளுடன் 34 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 18 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் யுபி வாரியர்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இந்த வெற்றியின் மூலம் நடப்பு டபிள்யூபிஎல் தொடரில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி தங்களுடைய முதல் வெற்றியைப் பெற்றுள்ளது. 

Also Read: Funding To Save Test Cricket

இப்போட்டியின் தோல்வி குறித்து பேசிய யுபி அணி கேப்டன் தீப்தி சர்மா, “இலக்கு சற்று சமமாக இருந்தது என்று நினைக்கிறேன். பேட்டிங் யூனிட்டாக நாங்கள் இன்னும் முன்னேறியிருக்க வேண்டும், மிடில் ஓவர்களில் சிறந்த பார்ட்னர்ஷிப் தேவைப்பட்டது. எங்களிடம் சிறந்த பந்துவீச்சு பலம் உள்ளது, பனி இருந்தபோதிலும் அவர்கள் சிறப்பாகச் செயல்பட்டுள்ளனர். பிட்ச்சிற்கு ஏற்ப இன்று சில பந்துகளை எங்களால் விச முடியவில்லை, அந்த விஷயங்களில் நாம் உழைக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளா

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை