டெத் ஓவர்களில் பந்துவீசிய விதம் சிறப்பாக இல்லை - சஞ்சு சாம்சன்!

Updated: Thu, Apr 10 2025 11:37 IST
Image Source: Google

குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி இன்று நடைபெற்றது. அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியானது 58 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது.

இந்த வெற்றியின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் தங்களுடைய 4ஆவது வெற்றியைப் பதிவுசெய்ததுடன், புள்ளிப்பட்டியலின் முதலிடத்திற்கும் முன்னேறி அசத்தியுள்ளது. அதேசமயம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மூன்றாவது தோல்வியைத் தழுவி தொடர்ந்து 7ஆம் இடத்தில் நீடித்து வருகிறது. இந்நிலையில், பந்துவீச்சில் கூடுதல் ரன்களை வழங்கியதே தோல்விக்கு காரணமாக அமைந்தது என ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய சஞ்சு சாம்சன், “பந்துவீச்சில் சுமார் 15-20 ரன்கள் அதிகம். நாங்கள் வேகத்தைத் தக்கவைக்க விரும்பும் போதெல்லாம் விக்கெட்டுகளை இழந்தோம், நானும் ஹெட்மியரும் பேட்டிங் செய்யும் போது இந்த இலக்கு எட்டக்கூடிய ஒன்றாக இருந்தது. ஆனால் எனது விக்கெட் ஆட்டத்தை மாற்றியது. இந்த போட்டியில் டாஸை வென்று பந்துவீச்சை தேர்வு செய்த பின்னர் ஜோஃப்ரா ஆர்ச்சர் அபாரமாக பந்துவீசி ஷுப்மன் கில்லின் விக்கெட்டை கைப்பற்றியது சாதகமாக இருந்தது. 

ஆனால் நாங்கள் டெத் நேரத்தில் பந்துவீசிய விதம் சிறப்பாக இல்லை. இதுகுறித்து நாங்கள் ஆலோசிக்க வேண்டும். நீங்கள் ஆட்டங்களில் தோல்வியடையும் போது, ​​நாங்கள் முதலில் துரத்தியிருக்க வேண்டும் அல்லது பேட்டிங் செய்திருக்க வேண்டும் என்று நினைக்கிறோம், இந்த நிலைமைகளை நாங்கள் எதிர்பார்த்தோம், இது ஒரு நல்ல விக்கெட், நாங்கள் நிலைமைகளை மதிக்க விரும்புகிறோம். சேஸிங்கின் போது போட்டியை வெல்லக்கூடிய ஒரு அணியாக இருக்க விரும்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த போட்டி குறித்து பேசினால், டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணியில் சாய் சுதர்ஷன் 82 ரன்களையும், ஜோஸ் பட்லர் மற்றும் ஷாருக் கான் ஆகியோர் தலா 36 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 217 ரன்களைச் சேர்த்தது. ராஜஸ்தான் தரப்பில் துஷார் தேஷ்பாண்டே மற்றும் மஹீஷ் தீக்க்ஷனா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். 

Also Read: Funding To Save Test Cricket

பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அதிரடியாக விளையாடிய ஷிம்ரான் ஹெட்மையர் அரைசதம் கடந்ததுடன் 52 ரன்களிலும், கேப்டன் சஞ்சு சாம்சன் 42 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் ராஜஸ்தான் அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 159 ரன்களுக்கு ஆல் அவுட்டானது, குஜராத் தரப்பில் பிரஷித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளையும், ரஷித் கான், சாய் கிஷோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை