Advertisement
Advertisement
Advertisement
Advertisement

Jofra archer

ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க வேண்டாம் - ஆர்ச்சருக்கு கட்டளை விதித்த இங்கிலாந்து!
Image Source: Google

ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க வேண்டாம் - ஆர்ச்சருக்கு கட்டளை விதித்த இங்கிலாந்து!

By Bharathi Kannan December 04, 2023 • 20:36 PM View: 254

ஐபிஎல் 2024 தொடருக்கான மினி ஏலம் வரும் 19ஆம் தேதி துபாயில் நடக்க உள்ளது. இந்த ஏலத்திற்கு முன்னதாக ஒவ்வொரு அணி வீரரும் தங்கள் அணியில் தக்கவைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டிலை வெளியிட்டது. அதன்படி 10 அணிகளில் 77 வீரர்களின் தேவை உள்ளது. இதனையடுத்து 1,166 வீரர்கள் ஐபிஎல் மினி ஏலத்திற்கு தங்கள் பெயரைப் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் 2024 ஆண்டு ஜூன் மாதம் வெஸ்ட் இண்டிஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக, உடற்தகுதியை மீட்டெடுக்கவும், தனது பணிச்சுமையைக் குறைக்கவும் ஐபிஎல் தொடரை புறக்கணிக்குமாறு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் ஜோஃப்ரா ஆர்ச்சரை கேட்டுக் கொண்டுள்ளது.

Related Cricket News on Jofra archer