2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் மெகா ஏலம் நெருங்கி வருகிறது. வரும் பிப்.12 மற்றும் 13ஆம் தேதிகளில் பெங்களூருவில் நடைபெறும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அணைத்து அணிகளும் மெகா ஏலத்திற்கான தங்களது வியூகங்களை வகுத்து வருகின்றனர்.

Advertisement

இந்த முறை ஐபிஎல் மெகா ஏலத்திற்கு 896 இந்திய வீரர்கள், 318 அயல்நாட்டு வீரர்கள் என மொத்தமாக 1,214 பேர் தங்களது பெயரை பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் இதில் முதல் முறையாக பூட்டானை சேர்ந்த மிக்யோ டோர்ஜி என்ற இளம் வீரர் இடம்பிடித்துள்ளார். வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான இவர் இதுவரை 2 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆனால் அவரின் திறமை ஐபிஎல் வரை கொண்டு வந்துள்ளது.

Advertisement

எம்.எஸ்.தோனியின் ரசிகரான மிக்யோ டோர்ஜி , சமீபத்தில் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். அப்போது தோனி, அனைத்தையும் எளிதாக பார். முடிவுகளை விட செயல்பாடுகளில் அதிக கவனம் செலுத்து, அப்போது தானாக சிறந்த முடிவு கிடைக்கும். தலையில் அதிக அழுத்தத்தை ஏற்றிக்கொள்ளாதே, அனுபவித்து கிரிக்கெட் விளையாடு என அறிவுரை கூறியுள்ளார்.

தோனியின் அறிவுரையை ஏற்றுக்கொண்ட மிக்யோ, நேரடியாக ஐபிஎல் தொடரில் கலந்துக்கொள்ள வந்துவிட்டார். இதுகுறித்து பேசிய அவர், ஐபிஎல்லில் விளையாட வேண்டும் என்பது எனது கனவு. ஏல பட்டியலில் எனது பெயரை பார்த்தவுடன் எனது ஊர்மக்கள் அனைவரும் தொடர்பு கொண்டு வாழ்த்துக் கூறுகின்றனர். பூட்டானுக்கே பெருமையாக உள்ளது எனக்கூறியுள்ளார்.

ஹர்திக் பாண்ட்யாவை போன்ற வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டருக்கு ஐபிஎல் தொடரிலும், இந்திய அணியிலும் அதிக வரவேற்புகள் உள்ளன. சமீபத்தில் வெங்கடேஷ் ஐயர் குறைந்த காலக்கட்டத்தில் இந்திய அணி வரை முன்னேறினார். எனவே மிக்யோவுக்காகவும் மெகா ஏலத்தில் கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரின் திறமையை தோனி அறிந்திருந்தால், சிஎஸ்கே அணியே இவரை ஏலம் எடுக்க முயலும் எனத்தெரிகிறது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News