ஐபிஎல் 16ஆவது சீசன் இரண்டாவது வாரத்தில் இருந்து கடைசிப் பந்து வரை செல்லும் பரபரப்பான ஆட்டங்களைக் கொண்டு தனது வழக்கமான தீ போன்ற சுவாரசியத்தில் கிளம்பியது. நேற்று குஜராத் அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியும் இந்த சுவராசியத்திற்கு எந்தக் குறையும் இல்லாமல் ரசிகர்களுக்கு விருந்து படைப்பதாக அமைந்தது.

Advertisement

குஜராத் டைட்டன்ஸ் அணி பவர் பிளேவில் 42 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து, பத்து ஓவர்களுக்கு 88 ரன்கள் இரண்டு விக்கெட்டுகள் என நிமிர்ந்து, பின்பு 20 ஓவர்கள் முடிவில் 177 ரன்களை ஏழு விக்கெட் இழப்புக்கு எடுத்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பவர் பிளேவில் 26 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து, பத்து ஓவர்களுக்கு மூன்று விக்கெட் இழப்புக்கு 53 ரன்கள் என இக்கட்டான நிலையிலேயே இருந்தது. மேலும் 11ஆவது ஓவரில் நான்காவது விக்கெட்டாக ரியான் பராக்கும் வெளியேறிவிட்டார்.

Advertisement

இப்படியான நிலையில் ரஷித் கான் வீசிய 13ஆவது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர் அடித்து 20 ரன்களை சஞ்சு சாம்சன் எடுக்க ஆட்டம் அங்கிருந்து சூடு பிடித்தது. அடுத்து 15 ஓவர்களுக்கு ஐந்து விக்கெட்டுகள் 114 ரன்கள் என்று வந்தது. அடுத்து ஹெட்மையர் அதிரடியில் கலக்கி ஆட்டத்தை வெற்றிகரமாக ராஜஸ்தான் அணிக்கு முடித்துக் கொடுத்துவிட்டார்.

இந்த வெற்றிக்குப் பின் பேசிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன், “சிறப்பான அணியுடன் சிறப்பான ஆடுகளத்தில் சிறப்பான மைதானத்தில் விளையாடும் பொழுது, மிகச் சிறந்த போட்டியை எதிர்பார்ப்போம். இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற அணியின் பக்கம் இருப்பதில் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. பந்துவீச்சாளர்களை ரொட்டேட் செய்வதை நான் முக்கியமாக கருதினேன். அவர்கள் எங்களது சுழற் பந்துவீச்சாளர்களை அடித்து விளையாடினார்கள். முதல் டைம் அவுட்டுக்குப் பிறகு அவர்கள் மிகச் சிறப்பான கிரிக்கெட் ஷாட்களை விளையாடினார்கள். 

நாங்கள் அதற்கு நல்ல மரியாதை கொடுத்தாலும் ஆனால் நாங்கள் அவர்களை 170 ரன்கள் கொண்டு வந்ததில் எங்கள் அணி மீது பெருமையாக இருக்கிறது. நாங்கள் பேட்டிங் செய்ய வந்த பிறகு இந்த விக்கெட் எவ்வளவு சிறப்பானது என்று தெரிந்தது. பவர் பிளேவில் அவர்கள் மிகச் சிறப்பான பந்துவீச்சு தாக்குதலை கொடுத்தார்கள். நாங்கள் அதற்கு மதிப்பளித்தோம். ஆனால் அதற்குப் பிறகு எங்களால் நல்ல ஷாட்களுக்குப் போக முடியும் என்று தெரியும். ஹெட்மையர் ஈஸியான சூழ்நிலைகளை விரும்புவதில்லை போல. நாங்களும் அவரை கஷ்டமான சூழ்நிலைகளில் வைப்பதற்கு யோசிப்பதில்லை” என்று தெரிவித்துள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News