மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று லாகூரில் நடைபெற்ற லீக் போட்டியில் தாய்லாந்து மற்றும் வங்கதேச மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற தாய்லாந்து மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய வங்கதேச மகளிர் அணிக்கு இஷ்மா தஞ்ஜிம் - ஃபர்கானா ஹக் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இஷ்மான் தஞ்ஜிம் 8 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் ஃபர்கானாவுடன் இணைந்த ஷர்மின் அக்தர் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஃபர்கான் ஹக் அரைசதம் கடந்து அசத்திய நிலையில் 53 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

Advertisement

அதன்பின் ஷர்மின் அக்தருடன் ஜோடி சேர்ந்த கேப்டன் நிகர் சுல்தானாவும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இந்த ஆட்டத்தில் இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினார். அதன்பின் தொடர்ந்து அபாரமாக விளையாடி வந்த நிகர் சுல்தானா சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். பின் 15 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 101 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் சுல்தானா தனது விக்கெட்டை இழந்தார். 

அதேசமயம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷர்மின் அக்தர் 11 பவுண்டரிகளுடன் 94 ரன்களைச் சேர்த்திருந்தார். இதன்மூலம் வங்கதேச மகளிர் அணி 50 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 271 ரன்களைச் சேர்த்தது. பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய தாய்லாந்து மகளிர் அணி வீராங்கனைகளால் எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.

அந்த அணியில் அதிகபட்சமாக சனிதா சுத்திருவாங் 22 ரன்களையும், நாட்டாய பூச்சத்தம் 17 ரன்களையும், நருயேமோல் சாய்வாய் 15 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீராங்கனைகள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் தங்கள் விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இதனால் தய்லாந்து மகளிர் அணி 28.5 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் 93 ரன்களில் ஆல் அவுட்டானது.

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

வங்கதேச அணிதரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஃபஹிமா கதும் மற்றும் ஜன்னத்துல் ஃபெர்டஸ் ஆகியோர் தலா 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் வங்கதேச அணி 178 ரன்கள் வித்தியாசத்தில் தாய்லாந்து மகளிர் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இப்போட்டியில் சதமடித்து அசத்தியா நிகர் சுல்தானா ஆட்டநாயகி விருதை வென்றார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News