ஆஸ்திரேலியா சென்றுள்ள தென் ஆப்பிரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.இதில் இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி, அபாரமாக ஆதிக்கம் செலுத்தி வெற்றியைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து மூன்றாவது போட்டி சிட்னியில் தொடங்கி நடைபெற்றது.

Advertisement

இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில் உஸ்மான் கவாஜாவின் சிறப்பான ஆட்டத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் அந்த அணி 4 விக்கெட் இழப்பிற்கு 475 ரன்களை எடுத்து டிக்ளர் செய்வதாக அறிவித்தது. இதில் அதிகபட்சமாக உஸ்மான் கவாஜா 195 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

Advertisement

இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸ் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியில் 9ஆவது இடத்தில் களமிறங்கிய மகாராஜ் 53 மட்டும்தான் அரை சதம் அடித்தார். அவரைத் தொடர்ந்து ஹர்மன் 47, ஜான்டோ 39, பவுமா 35 ஆகியோர் ஓரளவுக்கு ரன்களை அடித்தார்கள். மற்றவர்கள் சொதப்பியதால், தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 255 ரன்களை மட்டும் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

அதன்பின் 220 ரன்கள் பின்தங்கி பாலோ ஆன் பெற்ற தென் ஆப்பிரிக்க அணி இரண்டாவது இன்னிங்ஸ் களமிறங்கிய தென்னாபிரிக்க அணி 105/2 ரன்கள் சேர்த்து விளையாடி வந்த நிலையில், ஆட்டம் டிரா ஆனது. ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் இந்த டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேற ஆஸ்திரேலிய அணிக்கு வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. அந்த அணி 75.56% புள்ளிகளுடன் அசைக்க முடியாத இடத்தில் உள்ளது. அதேபோல் இந்தியா (58.93), இலங்கை (53.33%), தென்னாப்பிரிக்கா (48.72%) ஆகிய அணிகள் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன.

இந்நிலையில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 அல்லது 3-0 என்ற கணக்கில் வென்றால், இறுதிப்போட்டிக்கான வாய்ப்பு உறுதியாகிவிடும். ஒருவேளை இந்தியா 2-0 போட்டிகளில் மட்டும் வென்று, நியூசிலாந்து அணி இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்டில், ஒன்றில் டிரா செய்தால், இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிடும்.

Advertisement

ஒருவேளை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தோற்று, தென் ஆப்பிரிக்க அணி மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2 டெஸ்ட்களில் ஒன்றில் டிரா செய்தாலே மற்றும் நியூசிலாந்து அணி இலங்கைக்கு எதிராக ஒரு டெஸ்டில் டிரா செய்தாலே இந்தியா பைனலுக்கு முன்னேறிவிடும். இந்த கணிப்புகள் அனைத்திற்கும் வாய்ப்புகள் இருக்கிறது என்பதால், இந்தியா நிச்சயம் பைனலுக்கு முன்னேறும் எனக் கருதப்படுகிறது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News