ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3ஆவது சீசன் விறுவிறுப்பசக நடைபெற்று வருகிறத்.. இந்நிலையில் இத்தொடரில் இன்று நடைபெறும் 4ஆவது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் அணியை எதிர்த்து டெல்லி கேப்பிட்டல்ஸ் மகளிர் அணி பலப்பரீட்சை நடத்தின. வதோதராவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் அதிரடி தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா எதிர்கொண்ட முதல் பந்திலேயே ரேனுகா சிங் பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் கேப்டன் மெக் லெனிங்குடன் ஜோடி சேர்ந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 59 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 34 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். 

Advertisement

அவரைத்தொடர்ந்து 17 ரன்களைச் சேர்த்த நிலையில் மெக் லெனிங்கும் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் இணைந்த அனபெல் சதர்லேண்ட் - மரிஸான் கேப் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். பின்னர் 19 ரன்களில் அனபெல் சதர்லேண்ட் ஆட்டமிழக்க, 12 ரன்களுடன் மரிஸான் கேப்பும் தனது விக்கெட்டை இழந்தனர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ஜெஸ் ஜோனசெனும் ஒரு ரன்னுடன் நடையைக் கட்டினார். அதைத்தொடர்ந்து 23 ரன்கள் சேர்த்த நிலையில் சாரா பிரைஸ் விக்கெட்டை இழந்தார். 

இறுதியில் ஷிகா பாண்டே 14 ரன்களிலும், ராதா யாதவ் ரன்கள் ஏதுமின்றியும், இறுதியில் 4 ரன்கள் எடுத்திருந்த அருந்ததி ரெட்டியும் தனது விக்கெட்டை இழந்தார். இதனால் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 141 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆர்சிபி அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ரேனுகா சிங், ஜார்ஜியா வர்ஹேம் 3 விக்கெட்டுகளையும், கிம் கார்த், எக்தா பிஸ்ட் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதனையடுத்து 142 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு கேப்யன் ஸ்மிருதி மந்தனா மற்றும் டேனியல் வையட் ஹாட்ஜ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து தொடக்கம் அதிரடியாக விளையாடி அடுத்தடுத்து பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் விளாசி ஸ்கோரை உயர்த்தினர். இப்போட்டியில் அபாரமாக விளையாடிய ஆர்சிபி அணி கேப்டன் ஸ்மிருதி மந்தனா தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் இருவரின் பார்ட்னர்ஷிப்பும் முதல் விக்கெட்டிற்கு 107 ரன்களைக் கடந்தது. 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட டேனியல் வைட் 7 பவுண்டரிகளுடன் 42 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து கேப்டன் ஸ்மிருதி மந்தனாவும் 10 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 81 ரன்களைக் குவித்த கையோடு விக்கெட்டை இழந்தார். இருப்பினும் அடுத்த களமிறங்கிய வீராங்கனைகள் ரன்களைச் சேர்க்க ஆர்சிபி அணியானது 16.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 8 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News