ஐசிசி மாதாந்திர விருதுகள்: யஷஸ்வி, வில்லியம்சன், நிஷங்கா ஆகியோர் பரிந்துரை!

Updated: Mon, Mar 04 2024 20:32 IST
ஐசிசி மாதாந்திர விருதுகள்: யஷஸ்வி, வில்லியம்சன், நிஷங்கா ஆகியோர் பரிந்துரை! (Image Source: Google)

ஐசிசி கிரிக்கெட் வீரர்களை கவுரவிக்க பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது. வாழ்நாள் சாதனையாளர் விருது, ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக விளையாடும் வீரர் மற்றும் மாதம் தோறும் சிறப்பாக விளையாடும் வீரர்கள் என தேர்வு செய்யப்படுகின்றார். இது ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் இரண்டுக்கும் தனித்தனியே வழங்கப்படுகிறது. இந்நிலையில் பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனை யார் என்ற அறிவிப்பை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது.

இதில் ஆடவர் பரிந்துரை பட்டியலில் இந்திய அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இடம்பிடித்துள்ளார். இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடர் நடைபெற்று வரும் நிலையில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் அடுத்தடுத்த போட்டிகளில் இரட்டை சதம் விளாசி அசத்தியுள்ளார். இதன் காரணமாக அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. அதேபோல் நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன்னும் இம்மாத பரிந்துரை பட்டியலில் இடம்பிடித்துள்ளார். 

மேலும் ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிரான ஒருநாள் தொடரின் போது இரட்டை சதம் விளாசி மிரட்டிய இலங்கை அணியின் பதும் நிஷங்காவும் பிப்ரவரி மாதத்திற்கான பரிந்துரை பட்டியலில் இடம்பிடித்துள்ளார். இதையடுத்து வாக்குகளின் அடிப்படையில் இவர்களில் ஒருவருக்கு பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருது வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

அதேசமயம் மகளிர் வீராங்கனைகளுக்கான ஐசிசி பரிந்துரை பட்டியலில் ஆஸ்திரேலிய வீராங்கனை அன்னாபெல் சதர்லேண்ட், ஐக்கிய அரபு அமீரக அணியின் வீராங்கனைகளான கவிஷா எகொடகே மற்றும் ஈஷா ஓசா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதிலும் வாக்குகளின் அடிப்படையில் இவர்களில் ஒருவருக்கு பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருது வழங்கப்படும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை