லெஜன்ட்ஸ் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் பில்வாரா கிங்ஸ், இந்தியா கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையே குவாலிபயர் ஆட்டம் ஜோத்பூரில் நேற்று நடைபெற்றது.

Advertisement

இப்போட்டியில் டாஸ் வென்ற பில்வாரா கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது. அதன்படி விளையாடிய அந்த அணியில் வில்லியம் போர்ட்டர்ஃபீல் 59, ஷேன் வாட்சன் 65, யூசுப் பதான் 48, பிஷ்னோய் 36 என ரன்களைக் குவித்து அசத்த, 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 5 விக்கெட்டுகளை இழந்து 226 ரன்களைச் சேர்த்தது.

Advertisement

இதையடுத்து இலக்கை துரத்திய இந்தியா கேப்பிட்டல்ஸ் அணியில் வழக்கம் போலா கேப்டன் கவுதம் காம்பீர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். பின் டுவைன் ஸ்மித், ஹாமில்டன் மஸகட்சா, தினேஷ் ராம்டின் ஆகியோரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். 

இதையடுத்து ஜோடி சேர்ந்த ராஸ் டெய்லர் - ஆஷ்லே நர்ஸ் இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் இருவரும் அரைசதம் கடக்க அணியின் வெற்றியும் உறுதியானது. 

இதனால் 19.3 ஓவர்களில் இந்தியா கேப்பிட்டல்ஸ் அணி இலக்கை எட்டியதுடன், 4 விக்கெட் வித்தியாசத்தில் பில்வாரா கிங்ஸை வீழ்த்தி அசத்தியது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஆஷ்லே நர்ஸ் 60 ரன்களையும், ராஸ் டெய்லர் 84 ரன்களையும் சேர்த்து வெற்றிக்கு உதவினர்.

இந்நிலையில் இந்த ஆட்டத்தின்போது, யூசுப் பதான் மற்றும் மிட்சேல் ஜான்சன் ஆகியோருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பதான் மற்றும் ஜான்சன் முதலில் கடுமையான வார்த்தைப் போரில் ஈடுபட்டு மோதிக்கொண்டனர்.

Advertisement

 

அப்போது ஜான்சன் யூசுப் பதானைத் தள்ளினார். இதையடுத்து இருவரையும் பிரிக்க நடுவர்கள் தலையிட்டு பிரித்தனர். இவர்கள் மோதிக்கொண்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் போட்டியின் போது சக வீரரைத் தாக்கியதான் காரணமாக மிட்செல் ஜான்சனுக்கு தடை விதிக்கவும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News