ஜிம்பாப்வேவியில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்துமுடிந்த இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.

Advertisement

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். 

Advertisement

அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ராகுல் - ஷிகர் தாவன் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்ததுடன் அணிக்கு நல்ல அடித்தளத்தையும் அமைத்துக்கொடுத்தனர். இதில் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தவான் 40 ரன்களிலும், ராகுல் 30 ரன்களிலும் விக்கெட்டைஇ இழந்தனர். 

பின்னர் ஜோடி சேர்ந்த ஷுப்மன் கில் -  இஷான் கிஷான் இணை பொறுப்பான அட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதில் ஷுப்மன் கில் தனது அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினார். பின் அவருக்கு துணையாக விளையாடிய இஷான் கிஷானும் அரைசதம் கடந்த கையோடு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.

அடுத்து களமிறங்கிய தீபக் ஹூட ஒரு ரன்னோடு பெவிலியன் திரும்ப, மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷுப்மன் கில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். தொடர்ந்து அபாரமாக விளையாடிய ஷுப்மன் கில் 130 ரன்களைச் சேர்த்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார்.

இதன்மூலம் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 289 ரன்களைச் சேர்த்தது. ஜிம்பாப்வே அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய பிராட் எவன்ஸ் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News