அயர்லாந்து அணி தற்போது ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் தற்போது இரு அணிகளுக்கும் இடையே ஒருநாள் தொடரானது நடைபெற்று வருகிறது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு ஒருநாள் போட்டிகளின் முடிவில் ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து அணிகள் தலா ஒரு வெற்றியைப் பெற்று தொடரை சமன்செய்திருந்தது.

Advertisement

இந்நிலையில் ஜிம்பாப்வே - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. ஹராரேவில் உள்ள ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு கேப்டன் பால் ஸ்டிர்லிங் மற்றும் ஆண்ட்ரூ பால்பிர்னி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்டிர்லிங் 9 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

Advertisement

அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கர்டிஸ் காம்பெரும் 11 ரன்காளுடன் நடையைக் கட்டினார். பின்னர் ஜோடி சேர்ந்த பால்பிர்னி மற்றும் ஹாரி டெக்டர் இனை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர். அதன்பின் 64 ரன்கள் சேர்த்த நிலையில் ஆண்ட்ரூ பால்பிர்னி விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 51 ரன்களைச் சேர்த்த நிலையில் ஹாரி டெக்டரும் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய லோர்கன் டக்கரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

பின்னர் 61 ரன்னில் லோர்கன் டக்கர் 61 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இதனால் அயர்லாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்களைச் சேர்த்தது. ஜிம்பாப்வே தரப்பில் ரிச்சர்ட் ந்ங்கரவா, ட்ரெவர் குவாண்டு தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய ஜிம்பாப்வே அணிக்கு பிரையன் பென்னட் மற்றும் பென் கரண் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். இதில் பென் கரண் அரைசதம் கடந்தார்.

இதன்மூலம் இருவரின் பார்ட்னர்ஷிப்பும் முதல் விக்கெட்டிற்கு 124 ரன்கள் எடுத்த நிலையில், அரைசதத்தை நெருங்கிய பிரையன் பென்னட் 48 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய கேப்டன் கிரெய்க் எர்வினும் அதிரடியாக விளையாடி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார். இப்போட்டியில் எர்வினும் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்திய நிலையில், மறுபக்கம் அபாரமாக விளையாடி வந்த பென் கரண் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தனது முதல் சத்ததைப் பதிவுசெய்து அசத்தினர்.

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

மேற்கொண்டு இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பென் கரண் 14 பவுண்டரிகளுடன் 118 ரன்களையும், கேப்டன் கிரெய்க் எர்வின் 5 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 69 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் ஜிம்பாப்வே அணி 39.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 9 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை வென்றும் அசத்தியுள்ளது. இப்போட்டியில் சதமடித்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த பென் கரண் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News