
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியானது முதலில் அங்கு நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்தது. அதனைத்தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை (2-0) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. இதன்காரணமாக ஒருநாள் தொடரில் அடைந்த தோல்விக்கு இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி பழிதீர்த்து கொண்டது.
அந்த வகையில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 188 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2 ஆவது டெஸ்ட் போட்டி கடந்த 22ஆம் தேதி தொடங்கி இன்றுடன் முடிவுக்கு வந்தது.
அதன்படி இந்த இரண்டாவது போட்டியின் கடைசி இன்னிங்சில் 145 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்கவே ஒரு கட்டத்தில் தோல்வியை நோக்கி பயணித்தது. ஆனால் 8 ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ் ஐயர் 29 ரன்களையும் மற்றும் அஸ்வின் 42 ரன்களையும் சேர்த்து மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணிக்கு 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றுத்தந்தது.