
சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற குரூப் பி அணிகளுக்கு இடையேயன லீக் போட்டியில் தமிழ்நாடு மற்றும் உத்தரகாண்ட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்தூரில் நடைபெற்ற இப்போட்டியில் உத்தரகாண்ட் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய தமிழ்நாடு அணிக்கு பாபா இந்திரஜித் மற்றும் துஷார் ரஹேஜா இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து தொடக்கம் முதலே அதிரடியாக விளையடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 59 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், இந்திரஜித் 37 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். அதேசமயம் மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த துஷார் ரஹேஜா தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்திய நிலையில், 55 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் களமிறங்கிய ஜெகதீசன் அதிரடியாக விளையாடிய நிலையில் அவரும் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் மறுபக்கம் களமிறங்கிய பிரதோஷ் ரஞ்சன் பால் 18 ரன்களிலும், ஷாருக் கான் 15 ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, 57 ரன்களை எடுத்திருந்த ஜெகதீசனும் ஆட்டமிழந்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்தாலும் 194 ரன்களைக் குவித்தது. உத்தரகாண்ட் அணி தரப்பில் பியூஷ் சிங் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய உத்தரகாண்ட் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை.