
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் போட்டியானது நேற்று நெய்டாவில் உள்ள ஸ்போர்ட்ஸ் காம்ப்ளெக்ஸ் மைதானத்தில் தொடங்கியது. உலக கிரிக்கெட் வரலாற்றில் இவ்விரு அணிகளும் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இது என்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று அசத்தும் என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
அதன்படி நேற்று தொடங்க இருந்த இந்த போட்டியானது ஈரப்பதம் மற்றும் மோசமான வானிலை காரணமாக டாஸ் நிகழ்வானது ஒத்திவைக்கப்பட்டிருந்தது. பின்னர் மைதானத்தில் ஈரப்பதமானது தொடர்ந்து இருந்து வந்த காரணத்தால் இப்போட்டியின் முதல் நாள் ஆட்டமானது முழுவதுமாக கைவிடப்பட்டிருந்தது. இதனையடுத்து இன்று தொடங்க இருந்த இரண்டாம் நாள் ஆட்டமும் ஈரப்பதம் காரணமாக முழுவதுமாக கைவிடப்பட்டுள்ளது.
நேற்றைய தினமே மைதானத்தில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற முடியாத நிலையில், இன்றைய தினமும் தண்ணீரை வெளியேற்ற முடியாததன் காரணமாக இப்போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமும் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இவ்விரு அணிகளும் மோதும் முதல் டெஸ்ட் போட்டி என்பதால் ரசிகர்கள் கூடுதல் அவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், இரண்டு நாள் ஆட்டமும் முழுவதுமாக கைவிடப்பட்டள்ளது பெரும் ஏமாற்றமத்தைக் கொடுத்துள்ளது.