-mdl.jpg)
அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வேறு நாட்டிற்கு மாற்றப்படும் என்று ஜெய்ஷா பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை போட்டியை பாகிஸ்தான் புறக்கணிக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள இந்தியாவுக்கு எதிரான டி20 உலக கோப்பை ஆட்டத்தை பாகிஸ்தான் புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
இதுகுறித்து பேசிய பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் கம்ரான் அக்மல், “ஜெய்ஷாவின் இந்த பேச்சை நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால் அவர், இந்தியா பாகிஸ்தான் கடந்த முறை ஆசிய கோப்பையில் விளையாடிய போது அவர் மைதானத்தில் நேரில் வந்து பார்த்தார். ஜெய்ஷா அவருடைய அரசியலை எதிர்க்கட்சியினரிடையே மட்டும் தான் காட்ட வேண்டும்.