
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருபவர் யுஸ்வேந்திர சஹல். இவரும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இன்னொரு வீரரான கருண் நாயரும், ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு ஒரு பேட்டி அளித்திருந்தனர். இந்த பேட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் டிவிட்டர் தளத்தில் வெளியிடப்பட்டிருந்தது.
அந்தப் பேட்டியில் அதிர்ச்சிகரமான ஒரு தகவலை வெளியிட்டிருந்தார் சஹல். அதாவது 2013ஆம் ஆண்டு சஹல், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார். அப்போது பெங்களூரில் நடந்த ஒரு போட்டிக்குப் பின்னர் ஹோட்டலில் பார்ட்டி நடந்தது. அந்தப் பார்ட்டியின்போது சக வீரர் ஒருவர் நல்ல குடிபோதையில் இருந்துள்ளார். அவர் சஹலை, அப்படியே பிடித்து 15ஆவது மாடியிலிருந்து தொங்க விட்டு விளையாடியுள்ளார்.
அந்த வீரரின் இந்த குடிகார செயலால் அதிர்ச்சி அடைந்து உயிருக்குப் போராடியுள்ளார் சஹல். பின்னர் மற்ற வீரர்கள் வந்து சஹலை பத்திரமாக மீட்டு அவரை சகஜ நிலைக்குக் கொண்டு வந்தனர். இந்த சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களிடம் மட்டுமல்லாமல் வீரர்களிடமும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.