ரிஷப் பந்தை நேரில் சந்தித்த சுரேஷ் ரெய்னா; வைரலாகும் புகைப்படம்!
விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்றுவரும் ரிஷப் பந்தை முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் சந்தித்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த புகைப்படம் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

Ahead of IPL 2023 Rishabh Pant Gets Surprise Visit From Suresh Raina, Harbhajan Singh and Sreesanth (Image Source: Google)
இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ஆக வலம் வருபவர் ரிஷப் பந்த். இடது கை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த், பல்வேறு போட்டிகளில் இந்திய அணிக்காக சிறப்பாக ஆடி வெற்றியை தேடிக் கொடுத்துள்ளார். டெஸ்ட், டி 20 மற்றும் ஒரு நாள் போட்டி என அனைத்திலும் சிறந்து விளங்கி வரும் ரிஷப் பந்த், ஐபிஎல் தொடரிலும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்தார்.
விபத்திற்கு பிறகு ஒவ்வொரு நாளையும் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்வதாக பந்த் சமீபத்தில் தெரிவித்திருந்தார் . மேலும், தான் நடைப்பயிற்சி செய்யும் வீடியோவையும் அண்மையில் அவர் பதிவிட்டிருந்தார். இதனிடையே இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களான சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் மற்றும் ஸ்ரீசாந்த் ஆகியோர் ரிஷப் பண்டை சந்தித்திருக்கின்றனர்.
இதுகுறித்து ரெய்னா தனதுஇன்ஸ்டாகிராம் பதிவில்,"சகோதரத்துவம் என்றுமே முக்கியமானது. குடும்பத்தில் தான் நம்முடைய மனது மகிழ்ச்சியை காண்கிறது. ரிஷப் பண்ட் விரைவில் மீண்டு வர வாழ்த்துகிறேன். எப்போதும் நாங்கள் உங்களுடன் இருப்போம். நம்பிக்கையை ஒருபோதும் கைவிடாதீர்கள். பீனிக்ஸ் பறவை போல எப்போதும் உயர பறக்க வாழ்த்துக்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார். அதனுடன் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துளளர். இந்த பதிவு தற்போது ரசிகர்களுக்கு மத்தியில் வைரலாகி வருகிறது.Brotherhood is everything ..family is where our heart is..wishing our brother @RishabhPant17 the very best and fast recovery @harbhajan_singh @sreesanth36 pic.twitter.com/7ngs4HKPVX
— Suresh Raina (@ImRaina) March 25, 2023
Advertisement
Win Big, Make Your Cricket Tales Now
கிரிக்கெட்: Tamil Cricket News