
ஐபிஎல் 15வது சீசன் கிரிக்கெட் போட்டிகள் கடந்த மார்ச் 26ம் தேதியன்று தொடங்கியது. 10 அணிகள், புதிய அணிகள், புதிய விதிமுறைகள் என விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
அதன்படி அனைத்து அணிகளும் தங்களது முதல் போட்டியை முடித்துவிட்டதால் நடப்பாண்டுக்கான புள்ளிப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தற்போதைக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தான் முதலிடத்தை பிடித்துள்ளது. 5 அணிகள் தலா ஒரு வெற்றி பெற்ற போதும் ரன் ரேட் அடிப்படையில் ( 3.05 ) ராஜஸ்தானுக்கு முதலிடம் கிடைத்துள்ளது. நேற்று நடைபெற்ற ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இரண்டாவது இடத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 0.914 என்ற ரன் ரேட்டுடனும், 206 ரன்கள் இலக்கை விரட்டி ஆர்சிபிக்கு அதிர்ச்சி தந்த பஞ்சாப் கிங்ஸ் அணி 0.697 என்ற ரன்ரேட்டுடன் 3ஆவது இடத்திலும் இருக்கிறது. 4ஆவது இடத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் 5ஆவது இடத்தில் குஜராத் டைட்டான்ஸ் அணியும் இடம்பெற்றுள்ளது.