Advertisement
Advertisement
Advertisement

விக்கெட் நாயகனுக்கு அஸ்வினின் சிறப்பு பரிசு!

வான்கடே டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் 10 விக்கெட்டுகளை கைப்பற்றிய நியூசிலாந்து வீரர் அஜாஸ் படேலுக்கு மும்பை கிரிக்கெட் சங்கம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Advertisement
Ashwin gifts Ajaz Patel his Test jersey autographed by teammates
Ashwin gifts Ajaz Patel his Test jersey autographed by teammates (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Dec 06, 2021 • 07:28 PM

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையே மும்பையில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியாவின் 10 விக்கெட்டுகளையும் நியூசிலாந்து சுழற்பந்து வீரர் அஜாஸ் படேல் கைப்பற்றியிருந்தார்.

Bharathi Kannan
By Bharathi Kannan
December 06, 2021 • 07:28 PM

மேலும், 2ஆவது இன்னிங்சில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் இந்தியாவிற்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட் கைப்பற்றிய முதல் வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளார்.

Trending

இந்நிலையில் மும்பை கிரிக்கெட் சங்கம் சார்பில் அவருக்கு இன்று பாராட்டு தெரிவிக்கப்பட்டது. 2ஆவது டெஸ்ட் போட்டியின் முடிவில் வான்கடே மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அஜாஸ் படேலுக்கு மும்பை கிரிக்கெட் சங்கத் தலைவர் விஜய் பாட்டீல் பாராட்டு தெரிவித்தார்.  

மேலும், இந்த போட்டியின் முதன் இன்னிங்ஸ் அதிகாரப்பூர்வ ஸ்கோர் ஷீட்டையும் அவர் வழங்கினார். அப்போது கிரிக்கெட் பந்து மற்றும் விளையாட்டின்போது அவர் பயன்படுத்திய டீசர்ட் ஆகியவற்றை மும்பை கிரிக்கெட் சங்க அருங்காட்சியகத்திற்கு அஜாஸ் படேல் வழங்கினார்.

அதேசமயம் இந்திய சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், அனைத்து இந்திய அணி வீரர்களும் கையெழுத்திட்ட ஜெர்சியை ஆஜாஸ் படேலுக்கு வழங்கி கவுரவித்தார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement