Advertisement

இங்கிலாந்தின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுத்த அஸ்வின்!

ஐபிஎல் தொடர் குறித்து தவறாக பேசிய சில முன்னாள் வீரர்களுக்கு இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கடும் பதிலடி கொடுத்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan March 02, 2022 • 10:31 AM
 Ashwin gives stern reply to ex-cricketers bashing IPL 'without any reason'
Ashwin gives stern reply to ex-cricketers bashing IPL 'without any reason' (Image Source: Google)
Advertisement

இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 26ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. முதல் போட்டி வான்கேடேவில் நடைபெறும் எனத்தெரிகிறது. இந்த முறை 10 அணிகள் விளையாடுவதால் ஆட்ட முறைகளில் பல்வேறு மாற்றங்களை பிசிசிஐ கொண்டு வந்துள்ளது.

மொத்தமுள்ள 10 அணிகளையும் 2 குரூப்களாக பிரித்து லீக் போட்டிகள் நடைபெறவிருக்கிறது. இதில் இருந்து தேர்வு செய்யப்படவுள்ள அணிகள் தான் ப்ளே ஆஃப்-க்கு செல்லும். அதன்படி 70 லீக் போட்டிகள் மற்றும் 4 ப்ளே ஆஃப் போட்டிகள் நடைபெறவிருக்கிறது. இதற்கான அட்டவணை இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகலாம்.

Trending


இந்நிலையில் ஐபிஎல் தொடர் நடக்கக்கூடாது என இங்கிலாந்தின் முன்னாள் வீரர்கள் தொடர் குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகின்றனர். இங்கிலாந்து அணி சமீபத்தில் ஆஷஸ் தொடரில் 4 - 0 என்ற புள்ளிக்கணக்கில் மோசமான தோல்வியை சந்தித்தது. இதனால் ஐபிஎல்-ல் வீரர்கள் விளையாடுவதால் தான் சர்வதேச போட்டிகளில் சொதப்புகின்றனர் எனக்கூறுகின்றனர். பத்திரிகையாளர் ஒருவர் ஐபிஎல் தொடர் ஒரு ஆண்டில் 3இல் ஒரு பகுதியை எடுத்துக்கொள்கிறது எனக் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்நிலையில் அஸ்வின் அதற்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளார். அதில், “ஐபிஎல் போட்டிகள் 2 வாரங்கள் அதிகமாவதால் அப்படி என பிரச்சினை உங்களுக்கு?. இங்கிலாந்து, தென் ஆப்பிர்க்கா, இலங்கை, நியூசிலாந்து என பல அணிகளும் ஐபிஎல் தொடரின் போது சர்வதேச போட்டிகளில் விளையாடி வருகின்றன. அவர்களின் ஆட்டத்தை ஐபிஎல் கெடுக்கவில்லையே.

ஐபிஎல் 2 மாதங்கள் நடக்கிறது எனக்கூறுகிறார்கள். இங்கிலாந்தின் இங்கிலீஸ் ப்ரீமியர் லீக் தொடர் 6 மாதங்கள் நடக்கிறது. வாரத்தில் ஒன்று அல்லது 2 போட்டிகள் தான் நடக்கிறது. இதற்கெல்லாம் என்ன பதில் இருக்கிறது. ஐபிஎல் தொடர், கிரிக்கெட்டை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச்செல்கிறது என்பது தான் உண்மை. இது அனைத்து ரசிகர்களுக்கும், தொழிலதிபர்களுக்கும் தெரியும்.

2008, 2010 காலக்கட்டங்களில் இந்திய அணியில் முதன்மை வீரர்களாக விளையாட நாங்கள் 20 - 25 வீரரகள் தான் இருந்தோம். 10 வருடம் ஆடினாலும் 20 - 25 வீரர்கள் தான் இருப்பார்கள் என்பதால் அவர்கள் மட்டுமே பொருளாதார ரீதியில் பலனடைந்தார்கள். 

ஆனால் இன்று குறைந்தது 75 - 80 வீரர்கள் வரை ஒவ்வொரு ஆண்டும் இந்திய அணியில் விளையாட வாய்ப்பு பெறுகின்றனர். இது எவ்வளவு மகிழ்ச்சியான செய்தி. எனவே ஐபிஎல் குறித்து குறைக்கூறாதீர்கள்” எனத்தெரிவித்துள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement