
Ashwin reacts after being named in T20 World Cup squad (Image Source: Google)
ஐபிஎல் 2021 தொடரில், இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ், சன் ரைசர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
இந்நிலையில், இப்போட்டி தொடங்கும் முன்பு தொலைக்காட்சியில் பேட்டியளித்த அஸ்வின், இந்திய டி20 அணியில் மீண்டும் தேர்வு செய்யப்பட்டது குறித்து நெகிழ்ச்சியுடன் பேசினார்.
அப்போது பேசிய அஸ்வின், "நான் பொதுவாக எப்போது அதிகம் உணர்ச்சிவசப்பட மாட்டேன். அழ மாட்டேன். என் மனைவி மற்றும் சகோதரிகளிடம் நான், 'ஏன் சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் எமோஷ்னல் ஆகி அழுதுவிடுகிறீர்கள்?' என்று கேட்பேன். ஆனால், இப்போது தான் உண்மையில் அதன் காரணத்தை நான் உணர்ந்தேன். அணியில் நான் தேர்வு செய்யப்பட்ட செய்தி கேட்டவுடன் உடைந்து அழுதுவிட்டேன். ஆனந்த மிகுதியிலும் அழுகை வரும் என்பதை அன்று உணர்ந்து கொண்டேன்.