Advertisement
Advertisement
Advertisement

ஜடேஜானை சிஎஸ்கே ஏன் தக்கவைத்தது? - அஸ்வின் பதில்!

ரவீந்திர ஜடேஜா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் தக்கவைத்ததற்கான காரணத்தை விளக்கியுள்ளார் ரவிச்சந்திரன் ஆஸ்வின்.

Bharathi Kannan
By Bharathi Kannan November 19, 2022 • 16:05 PM
Ashwin Reveals The Only Reason CSK Would Have Thought About Selling Jadeja Before IPL 2023
Ashwin Reveals The Only Reason CSK Would Have Thought About Selling Jadeja Before IPL 2023 (Image Source: Google)
Advertisement

ஐபிஎல் 16ஆவது சீசனுக்கான முதற்கட்ட பணி தொடங்கியுள்ளது.ஐபிஎல் 16ஆவது சீசனுக்கு முன், டிசம்பர் 23ஆம் தேதி கொச்சியில் மினி ஏலம் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையில்லாத வீரர்களை நவம்பர் 15ஆம் தேதிக்குள் வெளியேற்ற வேண்டும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்தது. அதன்படி அனைத்து அணிகளின் விடுவிக்கப்பட்ட வீரர்கள் பட்டியல் வெளியானது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து டுவைன் பிராவோ, ராபின் உத்தப்பா, ஆடம் மில்னே, ஹரி நிஷாந்த், கிறிஷ் ஜோர்டன், பகத் வர்மா, கேஎம் ஆசிஃப், நாராயண் ஜெகதீசன் ஆகியோர் கழற்றிவிடப்பட்டுள்ளனர்.

Trending


சிஎஸ்கே தக்கவைப்பு: எம்எஸ் தோனி (கேப்டன்), டிவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அம்பதி ராயுடு, சுப்ரான்ஷு சேனாபதி, மொயின் அலி, சிவம் துபே, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், டுவைன் பிரிட்டோரியஸ், மிட்செல் சாண்ட்னர், ரவீந்திர ஜடேஜா, துஷார் தேஷ்பாண்டே, முகேஷ் சௌத்ரி, தீபக் சௌத்ரினா, சிமிர்ஜித் சிங், பிரசாந்த் சோலங்கி, மகேஷ் தீக்ஷனா ஆகியோரை சிஎஸ்கே தக்கவைத்துள்ளது.

இதில் ஜடேஜா அடுத்த சீசனில் விளையாட மாட்டார், டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு ட்ரேடிங் செய்யப்படுவார் என தகவல் வெளியாகி வந்த நிலையில், ஜடேஜாவை சிஎஸ்கே வெளியேற்றாமல் தக்கவைத்துள்ளது.

இந்நிலையில் இதற்கான காரணம் குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியுள்ளார். அதில், “ஜடேஜா ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டார் என யூகங்கள் வெளியாகி வந்தது. ஆனால், இந்த முறையில் ஜடேஜா சிஎஸ்கேவுக்காகதான் விளையாட உள்ளார். ட்ரேடிங்கில் மாற்றப்படுவார் என்றெல்லாம் பேசப்பட்டது. ஆனால், அதெல்லாம் எதுவும் உண்மை கிடையாது.

ஜடேஜா போன்ற ஒரு வீரரை வெளியேற்றினால் சிஎஸ்கேவுக்கு 16 கோடி மிச்சமாகும். அதைவைத்து சிறந்த வெளிநாட்டு வீரர்களை வாங்கலாம். ஆனால், இவரைப் போல ஒரு உள்நாட்டு வீரர் நிச்சயம் கிடைக்க மாட்டார். பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என மூன்றிலும் சிறப்பாக செயல்படும் இந்திய வீரர் கிடைக்க வாய்ப்பில்லை. அதுமட்டுமல்ல, ஜடேஜா வேறு எந்த அணிக்கும் சென்றாலும், அந்த அணி நிச்சயம் பலமிக்கதாக மாறிவிடும். இதனால், அவரின் மதிப்பை உணர்ந்து சிஎஸ்கே தக்கவைத்துள்ளது” எனக் கூறினார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement