
நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் ஆறாவது போட்டியானது நேற்று ஆஃப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே லாகூர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி முதலில் விளையாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 291 ரன்களை குவித்தது.
இலங்கை அணி சார்பாக அதிகபட்சமாக குசால் மெண்டிஸ் 92 ரன்களைடையும், பதும் நிசங்கா 41 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 292 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணியானது 37.4 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்து 289 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.
இதன் காரணமாக இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தான் அணி தோல்வியை தழுவியது. ஒரு கட்டத்தில் ஒரு பந்துக்கு 3 ரன்கள் தேவை என்கிற நிலையில் கைவசம் இருந்த இரண்டு விக்கெட்டுகளையும் இழந்த ஆப்கானிஸ்தான் அணி நூலிழையில் இந்த போட்டியை தவறவிட்டது.